|
1893. | ஏழிய லுலகிலுள் ளிருளுங் கையகன் றாழியல் 1வினைகளோ டவிய 2வாயிரம் தாழொளி சுடரவன் றன்னைக் காணவோர் சூழொளி மண்டிலஞ் சுடரத் தோன்றுமே. |
(இ - ள்.) ஏழுஇயல் உலகின் உள் இருளும் கையகன்று - ஏழாக இயலுகின்ற உலகிலே பரவியுள்ள அறியாமையென்னும் அக இருள் முழுதும் அகன்று, ஆழ் இயல் வினைகளோடு அவிய - பிறவிகளில் உயிரை அழுத்தும் இயல்பினையுடைய வினைகளுடனே அழிந்தும் போம்படி, ஆயிரம்தாழ் ஒளி சுடரவன் தன்னைக் காண - ஆயிரமாகிய தங்குதலையுடைய ஒளிக்கற்றைகள் மிளிருகின்ற அருகக்கடவுளைக் காணுமிடத்தே, ஓர் சூழ் ஒளி மண்டிலம் சுடரத் தோன்றுமே - ஒரு ஒளியாற் சூழப்பட்ட வட்டம் திகழ்ந்து தோன்றுவதாம், (எ - று.) காண - காணும்போது . சுடர - சுடர்ந்து. |
(783) |
|
1894. | கழுமிய பானிலாக் கதிரின் கற்றைகள் செழுமணித் திரண்மிசைச் செறிந்த போல்வன எழுவளர்த் தனையதோ ளியக்க ரேந்தின 3தொழுதகை யுருவின கவரி தோன்றுமே. |
(இ - ள்.) கழுமிய பால் நிலாக் கதிரின் கற்றைகள் - செறிந்த பால்போன்ற நிலாவொளிக்கற்றைகள், செழுமணித் திரள்மிசைச் செறிந்த போல்வன - செழிப்புடைய மணிகளின் குவியலின் மிசை அடர்ந்தது போன்றனவாய், தொழுதகை உருவின - தொழுதற்குரிய தன்மையுடைய வடிவமுடையனவாய், எழுவளர்த்தனைய தோள் இயக்கர் ஏந்தின கவரி தோன்றுமே - தூண் திரட்டினால் ஒத்த தோள்களையுடைய இயக்கர்களுடைய கையகத்தே ஏந்தப்பட்ட சாமரைகள், விளங்கித் தோன்றின, (எ - று.) மணிக் குவியலின் மேலே நிலாக்கற்றைகள் செறிந்தாற்போன்ற இயக்கர் ஏந்திய கவரி தோன்றும் என்க. |
(784) |
|
1895. | பருகலாம் பானிலாப் பரந்த மாமணி அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற் 4பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம் முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே. |
|
|
(பாடம்) 1 வினையளோ. வாயிரத். 3தொழுநகை. 4 பெருகெலாம். |