பக்கம் : 1176
 

     (இ - ள்.) அம் முருகு உலாம் பிண்டியான் குடையின் மும்மை - அந்த மணங்கமழும்
அசோக நீழலுடைய அருக பரமேட்டியின் மூன்று பகுதித்தாய குடை; பருகல் ஆம் பால்
நிலாப்பரந்த - உண்ணற்குரியதாகிய பால்போன்ற வெண்மையான நிலவொளி
பரந்தனவாகிய, மாமணி அருகெலாம் அணிந்து - சிறந்த மணிமாலைகள் விளிம்பில்
அணியப்பட்டு, அகடு அம் பொன் ஆர்ந்து - நடுவிடத்தே அழகிய பொன்றகடு பொருந்தப்
பெற்று, மேல் பெருகல் ஆம் சுடர் ஒளி பிறங்கி - மேற்பகுதியிலே, பெருகா நின்ற
சுடர்க்கற்றைகள் திகழ, நின்றது - நின்றது, (எ - று.)

     பிண்டியான் குடை பால்நிலாப் பரந்த ஒளிபிறங்கி நின்றன என்க.

(785)

 
1896. அழல்வளர்த் 1தனையன தழையு மவ்வழல்
தல்வளர்த் தனையன மலருந் தாமரைப்
பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினம்
குழைவள ரசோகின்மேற் 2குளிறு கின்றவே.
 
     (இ - ள்.) வண்டினம் - வண்டுகள், அழல் வளர்த்தனையன தழையும் - தீயை
வளர்த்தாலொத்த தழைகளிடத்தேயும், அவ்வழல் தழல் வளர்த்தனையன மலரும் -
அந்நெருப்பினது பிழம்பை வளர்த்தாற்போன்ற மலர்களிடத்தேயும், தாமரைப் பொழில் வளர்
வளையமும் - தாமரைக் காட்டிடத்தே வளர்ந்தவாய சுருள்களிடத்தேயும், பொதுளி -
மொய்த்து, குழைவளர் அசோகின்மேல் - தழைகள் செழித்து வளர்ந்துள்ள அசோக
மரத்தின் மேலே, குளிறுகின்றவே - ஆரவாரித்தன, (எ - று.)

     தாமரை வளையம் - அசோக மரத்தின்கண் அணியப்பட்டதென்க.

     வண்டினம் தழையினும் மலரினும் வளையத்தினும் பொதுளிப் பாடு கின்றன என்க.

(786)

 
1897. மாமழைக் கண்ணியர் மருங்கு போல்வன
தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள்
3பாமழை யுருவுகள் பலவுந் தோன்றவே
பூமழை பொன்னிலம் புதைய வீழ்ந்தவே.
 

      (பாடம்) 1 தனையகன் கழை. 2 குளிர்செய். 3 மாமழை.