பக்கம் : 1177 | | (இ - ள்.) மாமழைக் கண்ணியர் - கரிய குளிர்ந்த கண்ணையுடைய மகளிர்கள், மருங்கு போல்வன - இடையை ஒத்தனவாகி, தூம் மழை வளர்கொடி - பொழிகின்ற மழையாலே செழித்து வளர்கின்ற பூங்கொடிகள், பத்திகள் துவன்றி - ஒழுங்குபட நெருங்கி, பாமழை யுருவகள் பலவும் தோன்றவே - பரவுதலையுடைய மழைத்தாரைகளின் உருவங்கள் பல தோன்றும்படி, பூமழை - பொழியா நின்ற மலர்மாரி, பொன்னிலம் புதைய வீழ்ந்தவே - அழகிய நிலம் மறையும்படி வீழா நின்றன, (எ - று.) மழையால் வளர்கொடி செறிந்து மழையுருவுடையவாய்த் தோன்றின. பூமழை வீழ்ந்த என்க. | (787) | | 1898. | 1மொய்த்தலிங் கலர்மழை முருகு லாவிய மைத்தலை விசும்பிடை மயங்க வானவர் கைத்தலம் பரவிய காம ரின்னியம் எத்திசை மருங்கினு மிரங்கித் தோன்றுமே. | (இ - ள்.) வானவர் - அமரர்கள், கைத்தலம் பரவிய - கைகளாலே தூவப்பட்ட. மொய்த்து இலங்கு அலர் மழை - செறிந்து விளங்குகின்ற மலர்மாரி, மைத்தலை விசும்பிடை மயங்க - முகில்களையுடைய விண்ணிடத்தே பொருந்தா நிற்ப, வானவர் கைத்தலம் பரவிய - அத்தேவர்களின் கைகளிலே பரவியுள்ள, காமர் இன்னியம் - அழகிய துந்துபி என்னும் இசைக்கருவி, எத்திசை மருங்கினும் - எல்லாத் திசைகளிடத்தும், இரங்கித் தோன்றுமே - முழக்கத்தோடே தோன்றா நிற்கும், (எ று.) அலர்மழை விசும்பிடை மயங்க இன்னியம் எத்திசை மருங்கினும் இரங்கித் தோன்றும் என்க. | (788) | | | 1899. | மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப் பைஞ்ஞலம் பருகிய 2பரும வல்குலார் மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம் 3கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே. | (இ - ள்.) மைஞ் ஞலம் பருகிய கருங்கண் - மையினது நன்மையை உண்ட கரிய கண்ணையுடையவரும், மாமணிப் பருமம் - சிறந்த பதினென்கோவை மணிவடம் பூண்ட, பைஞ்ஞலம் பருகிய - பாம்புப் படத்தின் எழிலையுடைய, அல்குலார் - அல்குற்றடத்தை யுடையவருமாகிய மகளிரோடே, மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ - உடலழகுமிக்க விச்சாதரர்கள் வந்து பரவா நிற்ப, மேல் எலாம் - விசும்பிடமெங்கும், கிஞ்ஞர மிதுனங்கள் - கின்னரம் என்னும் ஆண் பெண் ஆகிய இணைப்பறவைகள், தோன்றும் - தோன்றா நின்றன, (எ - று) | |
| (பாடம்) 1 மொய்த்தலங். 2 வல்குலாரொடு. 3கிஞ்ஞலர். | | |
|
|