பக்கம் : 1178 | | ஞலம் - நலம்: நகரப் போலி. மிதுனம் - இணைப்பறவை. விஞ்சையர்தம் மாதரோடே விரவ மேலெலாம் கின்னர மிதுனம் தோன்றும் என்க. | (789) | | 1900. | எரிமணி நெடுமுடி யிமைப்பிற் செங்கணப் புரிமணி வண்ணனும் பொன்செ யாழியத் திருமணி வண்ணனுந் தேவி மார்களும் அருமணி வண்ணனுக் கருகு தோன்றினார். | (இ - ள்.) எரிமணி நெடுமுடி இமைப்பின் - ஒளிவிடுகின்ற மணிகள் பதித்த நீண்ட முடிக்கலனின் ஒளிர்தலோடு, செங்கண் அப்புரி மணிவண்ணனும் - சிவந்த கண்களை யுடைய முத்துப் போன்ற வெண்ணிறமுடைய அவ்விசயனும், பொன் செய் ஆழி அத்திருமணி வண்ணனும் - பொன்னாலியன்ற ஆழிப் படையை உடைய மரகத மணிபோன்ற நீல வண்ணனாகிய அத் திவிட்டனும், தேவிமார்களும், மிருகாபதி முதலிய கோப்பெருந்தேவியர்களும், அருமணி வண்ணனுக்கு - பெறற்கரிய மணிபோன்று திகழ்கின்ற திருமேனியை உடைய பயாபதி வேந்தனுக்கு, அருகு தோன்றினார் - பக்கத்தே எய்தினார்கள், (எ - று.) விசயனும் திவிட்டனும் தேவிமார்களும் பயாபதி வேந்தன் பக்கத்தே தோன்றினர் என்க. | (790) | | | 1901. | ஒண்டமர் மணிகளு 1மொளிர்பொற் சாதியும் கொண்டன ரியற்றிய கோலச் செய்கையால் கண்டவர் கண்கவர் நகரங் காண்டலும் விண்டுதிர் வினையினன் வேந்த னாயினான். | (இ - ள்.) ஒண் தமர் மணிகளும் - ஒள்ளிய தொளையுடைய மணிகளையும், ஒளிர் பொன் சாதியும் - ஒளிருகின்ற ஆடக முதலிய பொன் வகைகளையும், கொண்டனர் இயற்றிய - கைக்கொண்டு தொழில் வல்லுநரால் இயற்றப்பட்ட, கோலச் செய்கையால் - ஒப்பனைச் செயலாலே; கண்டவர் கண்கவர் - பார்த்தவருடைய கண்களைக் கவருகின்ற அழகுடைத்தாய, நகரங் காண்டலும், அருக பரமேட்டியின் திருக்கோயிலைக் கண்ட துணையானே, | |
| (பாடம்) 1 மொளிபொற். | | |
|
|