இது முதல் 10 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) மூவடிவினால் - மூன்று வடிவினையுடையதாகி, இரண்டு சூழ் சுடரும் நாண - உலகத்தைச் சுற்றி வருகின்ற ஞாயிறும் திங்களுமாகிய இரண்டு ஒளி மண்டிலங்களும் நாணும்படி, முழுதுலகம் மூடி - உலகங்கள் அனைத்தையும் கவிழ்த்து, எழில் முளை வயிரம் நாற்றி - அழகைத் தோற்றுவிக்கின்ற வயிரமணி மாலைகள் தூங்கா நிற்ப, தூவடிவினால் இலங்கு - தூய உருவத்தோடே திகழ்கின்ற, வெண்குடையின் நீழல் - வெள்ளை வண்ணக்குடை நிழலின்கண் வீற்றிருந்த சுடரோய் - ஒளிப்பிழம்பான அருக பரமேட்டியே!, உன் அடி போற்றி - உன்னுடைய திருவடிகளை வணங்கி, சொல்லுவது ஒன்றுண்டால் - அடியோம் கூறக்கிடந்த விண்ணப்பம் ஒன்றுளது அஃதியாதோவெனில், சேவடிகள் - உன்னுடைய சிவந்த அடியிணைகள், தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ - நீ நடந்த தாமரை மலரின் செந்நிற இதழ்கள் பொருந்தியதாலே சிவப்பு நிறம் எய்தினவோ, அன்றி, சேவடியின் செங்கதிர்கள் பாய - உன்னுடைய சிவந்த திருவடியின் செந்நிற ஒளி அம்மலரிடத்தே பாய்ந்தமையாலே, பூ வடிவு கொண்டனவோ - அத்தாமரை மலர் செந்நிறமான உருவத்தை எய்தினவோ, பொங்கு ஒளிகள் சூழ்ந்து - மிக்க ஒளிக்கற்றைகள் சூழப்பெற்று, எமக்குப் புலங்கொளாவால் - எம் போன்றோர்க்கு அறியவொண்ணாதனவாயிருந்தன, எம் புண்ணியர்தம் கோவே - எம் அறத்தகை அந்தணர்கட்குத் தலைவனே, அதனை அறிவித்தருள வேண்டும், |