பக்கம் : 1181
 
| Choolamani |

      (இ - ள்.) கருமாலை வெவ்வினைகள் கால்தளர நூறி - உயிர்களைப் பிறப்பிலே
புகுத்தும் தன்மையவாகிய வெவ்விய இருவகைவினைகளையும் தளர்ந்தும்போம்படி
பொடிசெய்தொழித்து, கடையிலா ஒள்ஞானக் கதிர்
விரித்தாய் என்றும் - இறுதியில்லாத ஒள்ளிய அறிவாகிய சுடரைப் பரப்பினாய் என்று
கூறியும், அருமாலை நன்னெறியை முன் பயந்தாய் என்றும் - மேற்கோடலரிய ஒழுங்குபட்ட
நல்லொழுக்கத்திற்குரிய வழியை முன்னரே காட்டியருளினாய் என்று கூறியும், அடியேம் -
உன் திருவடிகட்கு அடிமையாகிய யாங்கள், அடிபரவும் ஆறு அறிவதல்லால் - உன்
திருவடிகளைத் தொழுதேத்தும் ஒரு வழி் மாத்திரையே அறிந்திருப்ப தல்லாமல்,

     திருமாலே - திருமால் என்னும் திருப்பெயருடையோனே, திருவணங்கும் - திருமகள்
வணங்கா நின்ற, தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் சேவடியாய் - தேன் பொருந்திய
செந்தாமரை மலராலே தாங்கப்பெற்ற சிவந்த அடியிணையுடையோனே,

     தேவாதிதேவ - தேவர்களுக்கும் தலைவனே, பெருமானே - எத்திறத்தார்க்கும்
பெரியானே, நின் பெருமை நன்கு உணரமாட்டாதார் - உன் சிறப்புக்களை நன்றாக
அறிந்துகொள்ள இயலாதவராய், பிணங்குவார் தம்மை - நீ வகுத்த நெறியோடு முரணி
ஒழுகுவாரை, பிணக்கு ஒழிக்கலாமே - அம்முரணை ஒழித்தல் எம்மானோர்க்கு
இயல்வதேயோ,

(794)

 
1905. 1ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
     உலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
2அளியார வுலகநீ யாள்கின்றா யென்கோ
     3அமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
     நீவிரித்த 4வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
     தெளிந்தாலுஞ் 5செவ்வனே தெரிந்துரைக்க லாமே.
 
     (இ - ள்.) நீ ஒளியகி உலகுஆகி விரிந்தாய் என்கோ - நீயே ஒளியாகவும்
உலகங்களாகவும் பரவியுள்ளாய் என்பேனோ, அன்றி, நின்னொளியின் உள் உலகெலாம்
அடங்கிற்று என்கோ - நின்னியல்பான ஒளியினுள்ளே அநாதியாய உலகமுற்றும்
அடங்கியுள்ளது என்பேனா, அளி ஆர - உன் அருள் பொருந்தும்படி, நீ உலகம்
ஆள்கின்றாய் என்கோ - நீயே இவ்வுலகங்களை ஓம்புகின்றனை என்பேனோ அன்றி, அமர்
உலகுதான் நின்னது அடியடைந்தது என்கோ - நின்னைப் பெரிதும் விரும்புகின்ற
இவ்வுலகமே உன்னுடைய திருவடிப் பெருமையை உணர்ந்து
 

     (பாடம்) 1 ஒளியாலுலகமாய். 2 அளியா லமருலக மாள்கின்றாய்.

     3 அமருலகந். 4 வாறே பொருள். 5 செவ்வே தேர்ந்துரைக்க.