(இ - ள்.) கருமாலை வெவ்வினைகள் கால்தளர நூறி - உயிர்களைப் பிறப்பிலே புகுத்தும் தன்மையவாகிய வெவ்விய இருவகைவினைகளையும் தளர்ந்தும்போம்படி பொடிசெய்தொழித்து, கடையிலா ஒள்ஞானக் கதிர் விரித்தாய் என்றும் - இறுதியில்லாத ஒள்ளிய அறிவாகிய சுடரைப் பரப்பினாய் என்று கூறியும், அருமாலை நன்னெறியை முன் பயந்தாய் என்றும் - மேற்கோடலரிய ஒழுங்குபட்ட நல்லொழுக்கத்திற்குரிய வழியை முன்னரே காட்டியருளினாய் என்று கூறியும், அடியேம் - உன் திருவடிகட்கு அடிமையாகிய யாங்கள், அடிபரவும் ஆறு அறிவதல்லால் - உன் திருவடிகளைத் தொழுதேத்தும் ஒரு வழி் மாத்திரையே அறிந்திருப்ப தல்லாமல், திருமாலே - திருமால் என்னும் திருப்பெயருடையோனே, திருவணங்கும் - திருமகள் வணங்கா நின்ற, தேன் ஆரும் அரவிந்தம் ஏந்தும் சேவடியாய் - தேன் பொருந்திய செந்தாமரை மலராலே தாங்கப்பெற்ற சிவந்த அடியிணையுடையோனே, தேவாதிதேவ - தேவர்களுக்கும் தலைவனே, பெருமானே - எத்திறத்தார்க்கும் பெரியானே, நின் பெருமை நன்கு உணரமாட்டாதார் - உன் சிறப்புக்களை நன்றாக அறிந்துகொள்ள இயலாதவராய், பிணங்குவார் தம்மை - நீ வகுத்த நெறியோடு முரணி ஒழுகுவாரை, பிணக்கு ஒழிக்கலாமே - அம்முரணை ஒழித்தல் எம்மானோர்க்கு இயல்வதேயோ, |
(இ - ள்.) நீ ஒளியகி உலகுஆகி விரிந்தாய் என்கோ - நீயே ஒளியாகவும் உலகங்களாகவும் பரவியுள்ளாய் என்பேனோ, அன்றி, நின்னொளியின் உள் உலகெலாம் அடங்கிற்று என்கோ - நின்னியல்பான ஒளியினுள்ளே அநாதியாய உலகமுற்றும் அடங்கியுள்ளது என்பேனா, அளி ஆர - உன் அருள் பொருந்தும்படி, நீ உலகம் ஆள்கின்றாய் என்கோ - நீயே இவ்வுலகங்களை ஓம்புகின்றனை என்பேனோ அன்றி, அமர் உலகுதான் நின்னது அடியடைந்தது என்கோ - நின்னைப் பெரிதும் விரும்புகின்ற இவ்வுலகமே உன்னுடைய திருவடிப் பெருமையை உணர்ந்து |