பக்கம் : 1182
 

     அவ்வடிகளில் புகல்புக்கது என்பேனோ, விளியாத மெய்ப்பொருளை - அழிவில்லாத
மெய்ப்பொருளின்றன்மையை, நீ விரித்தாய் என்கோ - நீ அறிந்து கூறினாய் என்பேனோ
அன்றி, நீ விரித்தவாறே - நீ கூறியவண்ணமாய், மெய்ப்பொருள் விரிந்தது என்கோ -
அம்மெய்ப்பொருள் உளவாயிற்று என்பேனோ, தெளியாமலில்லை - எளியேமாயினும்
எம்மால் உன் திருவடிப் பெருமை சிறிது அறியப்படாமலில்லை, தெளிந்தாலும் செவ்வே
மெய்ம்மை தெரிந்து உரைக்கலாமே - சிறிது அறிந்த துணையானே உன் திருவடிப்
பெருமையை நன்கு தெரிந்து கூற எம்மனோரால் இயல்வதேயோ, (எ - று.)

(795)

 

களியானை நாற்கோட்ட தொன்றுடைய செல்வன்

1906. 1கண்ணொரா யிரமுடையான் கண்விளக்க மெய்தும்
     ஒளியானை யூழிமுத 2லானானை யோங்கி
உலகளவு மாகியுயிர் தமக்குறுகண் செய்யா
     அளியானை யாரழலஞ் சோதிவாய் சூழ்ந்த
அருளாழி 3யானையிணை யடிபரவு வார்கட்
     கெளியானை யெந்தைபெரு 4மானையே யல்லால்.
இறையாக வீங்கொருவ ரெண்ணுமா றென்னே.
 
     (இ - ள்.) நால் கோட்டது களியானை ஒன்றுடைய செல்வன் - நான்கு கோடுகளை
உடைத்தாகிய களிப்புமிக்க ஐராவதம் என்னும் ஒரு சிறந்த யானையை உடைய
செல்வமிக்கவனும், கண் ஓராயிரம் உடையான் - ஓராயிரம் கண்களையுடையவனுமாகிய
தேவேந்திரன், கண் விளக்கம் எய்தும் - அவ்வாறு சிறப்பாகப் பெற்றுள்ள
ஆயிரங்கண்களாலும் நுகர்ந்து காட்சியின்பத்தாற் றிகழ்தற்குக் காரணமான, ஒளியானை -
ஒளிப்பிழம்- பானவனை, ஓங்கி - மிக்கு, உலகு அளவுமாகி - உலகத்தின் விரிவு முழுதும்
தன்னுள்ளடங்குமளவின் விரிந்து, உயிர் தமக்கு உறுகண் செய்யா அளியானை -
எவ்வுயிர்க்கும் எத்துணையும் இன்னல் செய்யாமையாகிய அருளையுடையவனை, ஆர் அழல்
அம்சோதிவாய்சூழ்ந்த அருள் ஆழியானை - பொருந்திய தீப்பிழம்பாகிய அழகிய
ஒளிக்கற்றை தன்னிடத்தே சூழப்பெற்ற அருள் ஆழியை உடையவனை, ஊழி முதல்
ஆனானை - ஊழிக் காலத்தேயும் அழிவின்றி நிற்றலுடையவனை, அடி பரவுவார்கட்கு
எளியானை - தனது திருவடியில் வணங்கும் அடியவர்கட்கு எளிதே காணப்படுபவனை,
எந்தை பெருமானை என் தந்தையாகிய பெரியவனையே, அல்லால் - இறைவனாகக் கருதி
வழிபடுவதன்றி, ஈங்கு - இவ்வுலகத்தே, ஒருவர் இறையாக எண்ணும் ஆறு என்னே - வேறு
ஒருவரைக் கடவுளாக எண்ணுதற்கியன்ற, சமயத்தார்களின் பேதைமைதான் எத்தகைத்தோ
அறிகிலோம், (எ - று.)

 (796)

 

     (பாடம்) 1 கண்ணா. 2 லானையடி. 3 யானை. 4 மானையல்லால்.