பக்கம் : 1183
 
| Choolamani |
 
1907. தெருளாமை யால்வினவற் பாலதொன் றுண்டு
     திருவடிகள் 1செம்பொனா ரரவிந்த மேந்த
2இருளாழி யேழுலகுஞ் சூழொளியின் மூழ்க
     இமையாத 3செங்கண்ணி னிமையோர்வந் தேத்த
உருளாழி யானுமொளி மணிமுடிமேற் கைவைத்
     தொருபாலில் வரவுலக நின்னுழைய தாக
அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ
     அடிப்படா 4தாய்நின்ற வகன்ஞால முண்டோ.
 
     (இ - ள்.) தெருளாமையால் - அறியாமை காரணமாக, வினவற்பாலது ஒன்றுண்டு -
அடியேன் அடிகளை வினவுதற்குரிய பொருள் ஒன்றுளது, அஃதியாதெனில், திருவடிகள் -
அடிகளாருடைய திருவடிகளை, செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த - செவ்விய
பொன்னிறமமைந்த தாமரை மலர் ஏந்தா நிற்பவும், இருளாழி ஏழுலகும் - இருட்கடலிலே
மூழ்கியுள்ள ஏழுலகங்களும், சூழ் ஒளியின் மூழ்க - நின்னைச் சூழ்ந்துள்ள
ஒளிவட்டத்துள்ளே மூழ்காநிற்பவும், இமையாத செங்கண்ணின் இமையோர் வந்து ஏத்த -
இமைத்தற்றொழிலில்லாத சிவந்த கண்ணையுடைய தேவர்கள் நின்னைச் சூழ்ந்து வந்து
புகழ்பாடி ஏத்தா நிற்பவும், உருள் ஆழியானும் - உருள்கின்ற ஆழியங்கடவுளும்,

     ஒளிமணி முடிமேற் கைவைத்து - ஒளியுடைய மணிகள் பதித்த தனது முடிக்கலன்
மிசையே தன் கைகளைக் குவித்தபடியே, ஒரு பாலில்வர - ஒரு பக்கத்தே வாராநிற்பவும்,
அருளாழி முன் செல்ல - தருமசக்கரம் முன்னர்ச் செல்லா நிற்பவும், உலகம்
நின்னுழையதாக - உலகமனைத்தும் உன்னுள்ளே அடங்கிக்கிடப்பனவாகவும், பின செல்வது
என்னோ - அருளாழியின் பின் எழுந்து செல்லா நிற்றற்குக் காரணம் யாதோ,

      அடிப்படாதாய் நின்ற அகல் ஞாலம் உண்டோ - உனது திருவடியாட்சியிற்
படாதொழிந்த விரிந்த உலகம் வேறும் உளதேயோ, உரைத்தருள்க, (எ - று.)

(797)

 

     (பாடம்) 1 செம்பொனர. 2 இருளாழவே. 3 செங்கணிமை. 4 தாய.