உன்னுடைய இறுதியில்லாத மெய்யறிவின் ஒளியின் ஊடே உள்ளனவாய், ஒருவாது - மேலும் அவ்வறிவினின்றும் அகலாமல், அவ்வொளியின் உள்ள ஆகில் - அவ் வறிவொளியின்கண் யாண்டும் உள்ளனவானால், உலகெலாம் நின்னுளத்தே - எல்லா வுலகமும் உன்னகத்தனவே, ஒளிக்க வேண்டா - இவ்வுண்மையை எளியேங்கட்கு மறைத்தருள வேண்டா, திருவார்ந்த தண் மார்ப! - திருமகள் பொருந்திய குளிர்ந்த மார்பையுடையோனே!, தேவாதி தேவ - தேவர்கட்குந் தேவனே!, திரள் அரைய செந்தளிர் அசோகு அமர்ந்த செல்வ - திரண்ட அடிப்பாகத்தையுடையதும் செவ்விய தளிர் உடையதுமாகிய அசோகமரத்தின் நிழலிலே இருந்த செல்வனாகிய அருகனே!, வருவாரும் - பிறவிகளிலே சுழன்று வருகின்ற உயிர்களும், வையகமும் - அவை பிறத்தற்கிடமான உலகங்களும், நீயும் - இறையாகிய நீயும், வேறாகி - வெவ்வேறாகத் தோன்றி, மணிமேனி மாலே - நீல மணிபோன்ற நிறமுடைய திருமாலே, மயக்குவது இங்கு என்னோ - இவ்விடத்தே எளியேங்களை மயங்கச் செய்வது எதனைக் குறித்தோ, அறிகின்றிலோம், (எ - று.) |
(இ - ள்.) செங்கண் நெடுமாலே - சிவந்த கண்களையுடைய நெடிய மாலே, செறிந்து இலங்கு சோதி - நெருங்கி விளங்குகின்ற ஒளியையுடைய, திருமுயங்கு - திருமகள் தழுவுகின்ற, மூர்த்தியாய் - உருவையுடையவனே, செய்ய தாமரையின் - சிவந்த தாமரை மலரின்கண்ணே, அங்கண் அடி வைத்தருளும் - அழகிய எம்கண் போன்ற திருவடிகளை வைத்தருள்கின்ற, ஆதியாய் - ஆதியாகிய இறைவனே, அறஆழி அரசே - அறவாழியை |