பக்கம் : 1187
 

      உன்னுடைய இறுதியில்லாத மெய்யறிவின் ஒளியின் ஊடே உள்ளனவாய், ஒருவாது -
மேலும் அவ்வறிவினின்றும் அகலாமல், அவ்வொளியின் உள்ள ஆகில் - அவ்
வறிவொளியின்கண் யாண்டும் உள்ளனவானால், உலகெலாம் நின்னுளத்தே - எல்லா
வுலகமும் உன்னகத்தனவே, ஒளிக்க வேண்டா - இவ்வுண்மையை எளியேங்கட்கு
மறைத்தருள வேண்டா, திருவார்ந்த தண் மார்ப! - திருமகள் பொருந்திய குளிர்ந்த
மார்பையுடையோனே!, தேவாதி தேவ - தேவர்கட்குந் தேவனே!, திரள் அரைய செந்தளிர்
அசோகு அமர்ந்த செல்வ - திரண்ட அடிப்பாகத்தையுடையதும் செவ்விய தளிர்
உடையதுமாகிய அசோகமரத்தின் நிழலிலே இருந்த செல்வனாகிய அருகனே!,

     வருவாரும் - பிறவிகளிலே சுழன்று வருகின்ற உயிர்களும், வையகமும் - அவை
பிறத்தற்கிடமான உலகங்களும், நீயும் - இறையாகிய நீயும், வேறாகி - வெவ்வேறாகத்
தோன்றி, மணிமேனி மாலே - நீல மணிபோன்ற நிறமுடைய திருமாலே, மயக்குவது இங்கு
என்னோ - இவ்விடத்தே எளியேங்களை மயங்கச் செய்வது எதனைக் குறித்தோ,
அறிகின்றிலோம்,
(எ - று.)

(801)

 
1912. செங்கணெடு மாலே 1செறிந்திலங்கு சோதித்
     2திருமுயங்கு மூர்த்தியாய் 3செய்யதா மரையின்
அங்கணடி 4வைத்தருளு மாதியா யாழி
     அறவரசே 5யென்றுநின் னடிபணிவ தல்லால்
எங்கணிட 6ரகலுமா றிந்திலைமை யெய்தி
     இருளுலக நீக்குமரு டருகநீ யென்று
வெங்கணிரு வினையை7 யற வென்றாய்முன் னின்று
     விண்ணப்பஞ் செய்யும் விழுத்தகைமை யுண்டோ.
 
     (இ - ள்.) செங்கண் நெடுமாலே - சிவந்த கண்களையுடைய நெடிய மாலே, செறிந்து
இலங்கு சோதி - நெருங்கி விளங்குகின்ற ஒளியையுடைய, திருமுயங்கு - திருமகள்
தழுவுகின்ற, மூர்த்தியாய் - உருவையுடையவனே, செய்ய தாமரையின் - சிவந்த தாமரை
மலரின்கண்ணே, அங்கண் அடி வைத்தருளும் - அழகிய எம்கண் போன்ற திருவடிகளை
வைத்தருள்கின்ற, ஆதியாய் - ஆதியாகிய இறைவனே, அறஆழி அரசே - அறவாழியை
 

     (பாடம்) 1 சென்றிலங்கு. 2 திருமயங்கு. 3 செந்தாமரையின். 4 வைத்தவாழியாய்.

     5 யென்றுன். 6 ரகலவின்னிலைமை. 7 வென்று, வென்றாய்.