பக்கம் : 1188 | | யுடைய வேந்தனே, என்று - என்றின்னோரன்ன நின்திருப் பெயர்களை இயம்பி, நின் அடிபணிவதல்லால் - உன்னுடைய திருவடிகளை வணங்குவதே அல்லாமல், எங்கண் - எம்மிடத்தே உள்ள, இடர் அகலுமாறு - பிறவித்துன்பம் அகன்று போம்படி, இந்நிலைமை எய்தி - இந்தநிலையிலே எம்பால் எழுந்தருளிவந்து, நீ - தேவதேவனாகிய நீ, இருள் உலகம் நீக்கும் அருள் தருக என்று - மயக்கமுடைய இவ்வுலகத்தே எய்தும் பிறப்பை ஒழிக்கவல்ல உனது திருவருளைத் தந்தருள்க என்று வேண்டி, வெங்கண் இருவினையை - தறுகண்மையை உடைய இருவகை வினைகளையும், அற வென்றாய் முன்நின்று - முற்றும் வென்றொழித்த உனது முன்னே நின்று, விண்ணப்பம் செய்யும் - வேண்டுகோள் செய்தற்குரிய, விழுத்தகைமை - பெருஞ்சிறப்பு, உண்டே - எம்மிடத்தே உளதேயோ, (இல்லை என்றபடி) | (802) | | பயாபதி மன்னன் ஒரு பொன்மண்டபம் எய்துதல | வேறு | 1913. | என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச் சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து வென்றவன் கோயில் வலங்கொண்டு 1மீண்டுமொர் பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான். | (இ - ள்.) என்று - என்றிவ்வாறு, இறைவனை - அருகக் கடவுளை, இறைஞ்சி - வணங்கி, நன்கு ஏத்தி - நன்றாகப் புகழ்ந்து, சென்று - அண்மையிலே சென்று, உயர் சேவடிச்சேடம் தலைவைத்து - உயரிய திருவடிச் சேடமாகிய நிர்மாலியத்தைத் தன் தலையிலே சூட்டிக்கொண்டு, வென்றவன் கோயில் வலங்கொண்டு - வினைகளை வென்றவனாகிய அவ்வருவகக் கடவுளின் திருக்கோயிலை வலம் வந்து, மீண்டும் - மீளவும், ஓர் பொன்றவழ் வேதிகை - ஓர் அழகு தவழ்கின்ற மேடையையுடைய, மண்டபம் புக்கான் - மண்டபத்தின் கண்ணே புகுந்தான், (எ - று.) பயாபதி மன்னன், இறைவனை இறைஞ்சிச் சேடந் தலைவைத்துக் கோயில் வலங்கொண்டு, மீண்டும் ஒரு பொன் மண்டபம் புக்கான் என்க. | (803) | |
| (பாடம்) 1 மீட்டு மோர். | | |
|
|