பக்கம் : 1188
 

     யுடைய வேந்தனே, என்று - என்றின்னோரன்ன நின்திருப் பெயர்களை இயம்பி, நின்
அடிபணிவதல்லால் - உன்னுடைய திருவடிகளை வணங்குவதே அல்லாமல், எங்கண் -
எம்மிடத்தே உள்ள, இடர் அகலுமாறு - பிறவித்துன்பம் அகன்று போம்படி, இந்நிலைமை
எய்தி - இந்தநிலையிலே எம்பால் எழுந்தருளிவந்து, நீ - தேவதேவனாகிய நீ, இருள்
உலகம் நீக்கும் அருள் தருக என்று - மயக்கமுடைய இவ்வுலகத்தே எய்தும் பிறப்பை
ஒழிக்கவல்ல உனது திருவருளைத் தந்தருள்க என்று வேண்டி,

     வெங்கண் இருவினையை - தறுகண்மையை உடைய இருவகை வினைகளையும், அற
வென்றாய் முன்நின்று - முற்றும் வென்றொழித்த உனது முன்னே நின்று, விண்ணப்பம்
செய்யும் - வேண்டுகோள் செய்தற்குரிய, விழுத்தகைமை - பெருஞ்சிறப்பு, உண்டே -
எம்மிடத்தே உளதேயோ, (இல்லை என்றபடி)

(802)

 
பயாபதி மன்னன் ஒரு பொன்மண்டபம் எய்துதல
வேறு
1913. என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச்
சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து
வென்றவன் கோயில் வலங்கொண்டு 1மீண்டுமொர்
பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான்.
 
     (இ - ள்.) என்று - என்றிவ்வாறு, இறைவனை - அருகக் கடவுளை, இறைஞ்சி -
வணங்கி, நன்கு ஏத்தி - நன்றாகப் புகழ்ந்து, சென்று - அண்மையிலே சென்று, உயர்
சேவடிச்சேடம் தலைவைத்து - உயரிய திருவடிச் சேடமாகிய நிர்மாலியத்தைத் தன்
தலையிலே சூட்டிக்கொண்டு, வென்றவன் கோயில் வலங்கொண்டு - வினைகளை
வென்றவனாகிய அவ்வருவகக் கடவுளின் திருக்கோயிலை வலம் வந்து, மீண்டும் -
மீளவும், ஓர் பொன்றவழ் வேதிகை - ஓர் அழகு தவழ்கின்ற மேடையையுடைய, மண்டபம்
புக்கான் - மண்டபத்தின் கண்ணே புகுந்தான், (எ - று.)

     பயாபதி மன்னன், இறைவனை இறைஞ்சிச் சேடந் தலைவைத்துக் கோயில்
வலங்கொண்டு, மீண்டும் ஒரு பொன் மண்டபம் புக்கான் என்க.

(803)

 

     (பாடம்) 1 மீட்டு மோர்.