பக்கம் : 1191 | | | மன்ன னறியுந் திருவற மாண்பினை என்னை வினவிய தென்னைகொ லென்றான். | (இ - ள்.) வன்ன மணிமுடி மன்னன் இருந்திட - நிறமமைந்த மணிகளானியன்ற முடியையுடைய பயாபதி வேந்தன் நும்பால் உளனாக, இன்னியல் செல்வம் எனைப்பல எய்திய - இனிய இயல்பினையுடைய செல்வங்கள் எத்துணையும் பலவாயவற்றைப் பெற்றுள்ள, மன்னன் அறியும் திரு அறம் - அம் மன்னனாலே அறியப்பட்டுள்ள சிறந்த அறவுரையின், மாண்பினை - பெருமைகளை, என்னை வினவியது என்னைகொல் என்றான் - என்னைக் கூறும்படி வேண்டிக் கோடற்குக் காரணம் யாது, என்று முனிவன் வினவினான், கொல்: அசை, (எ - று.) மணிமுடி மன்னன் திருவறம் உயர்ந்தோன் நும்பாலிருக்க அவன் பால் வினவி அறிந்து கொள்ளாமல் என்னை வினவியதன் காரணம் என்னை என்றான் என்க. | (807) | | அமைச்சர் அரசனியல்பு உரைத்தல் | 1918. | அடிக ளடிசி லமைந்த தயில்வான் முடிய முயலு முறைமை யறியான் நெடிதி னதுவறு நீர்மையு மோரான் வடிவமர் செல்வன் வகையு மதுவே. | (இ - ள்.) அடிகள் - அடிகளே, அடிசில் அமைந்தது அயில்வான் - ஒரு சாத்தன் சமைக்கப்பட்ட உண்டியினை உண்பான், முடிய முயலும் முறைமை அறியான் - அத்துணையே அன்றி, அவ்வுணவினை உண்டாக்குதற்கு முயலவேண்டிய முயற்சியின் தன்மையும் அறியமாட்டான், நெடிதின் அது அறும் நீர்மையும் ஓரான் - தான் உண்ட அவ்வுணவு எவ்வாறு அற்றொழிகின்ற தென்பதையும் அறியான், வடிவமர் செல்வன் - அழகு மிக்க செல்வமுடைய எம்மரசன், வகையும் அதுவே - முறையும் அச்சாத்தன் முறையேயாம். (எ - று.) ஊழ்வினையாலே தரப்படுகின்ற நுகர்ச்சிகளை நுகருமாத்திரையன்றி யாங்கள் பிறிதொன்றும் முணரோம் என்றபடி. அரசனுக்கும் தமக்கும் வேற்றுமை கருதாராய்த் தம்மியல்பை அரசன் மேலேற்றிக்கூறினார், | (808) | | 1919. | மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை அந்தரம் வாழு மமரர் வழிபடும் தந்திர1 ஞ் சான்ற தவத்திற் கரசனும் இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான். | |
| (பாடம்) 1 ஞான்ற. | | |
|
|