பக்கம் : 1192 | | (இ - ள்.) மந்திர மாந்தர் மொழிதலும் - அமைச்சர்கள் இவ்வாறு கூறிய உடனே, வான் இடை அந்தரம் வாழும் அமரர் வழிபடும் - விசும்பினிடையே உள்ள அந்தர உலகில் வாழ்கின்ற தேவர்களும் வணங்கும், தந்திரம் சான்ற தவத்திற்கு அரசனும் - நூலறிவானிரம்பிய தவத்திற்கு அரசனாகிய அம்முனிவனும், இந்திரன் அன்னாற்கு எடுத்து உரைக்கின்றான் - தேவேந்திரனை ஒத்த சிறப்புடைய பயாபதி மன்னனுக்கு அறவுரைகளை எடுத்துக் கூறுவானாயினான், (எ- று.) தந்திரம் - நூல். இந்திரன் அன்னான்: பயாபதி. அத்துறவி பயாபதிக்கு, திருவறம் எடுத்துக் கூறுகின்றான் என்க. | (809) | | 1920. | கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின் விதிசெய் வினையும் வினைவெல் வகையு மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான். | (இ - ள்.) கதியும் - உயிர்கள் செல்லும் பிறப்பும், அக்கதியினுள் - அப்பிறப்பினுள், துப்பும் - நிகழும் நுகர்ச்சியும், அத்துப்பின் விதி செய்வினையும் - அந்நுகர்ச்சியை ஒழுங்குபடுத்துகின்ற வினைகளின் தன்மையும், அவ்வினை வெல்வகையும் - அவ்வினைகளை வென்றொழிக்கும் உபாயமும், மதியவர் காமுறும் வீட்டது மாண்பும் - மெய்யறிஞரால் விரும்பப்படுகின்ற முத்தியின் மாட்சிமையும், அதிபதி - அரசனே, கேள் - யாம் கூறக்கேட்பாய், என்று அருந்தவன் சொன்னான் - என்று அரிய தவமிக்க அத்துறவி கூறினான், (எ - று.) கதியும் துப்பும் வினையும் வினைவெல்வகையும் வீட்டது மாண்பும் கேள் என்று அருந்தவன் கூறினன் என்க. | (810) | | நால்வகைப் பிறப்பும் நவிலல் | 1921. | ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள வீடி லொருவன் 1விசிறும் வளையமும் ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர் நாடுங் கதியவை நான்குள கண்டாய். | (இ - ள்.) ஓடும் சகடத்து உருளும் - ஓடாநின்ற பண்டியின் உருளைகளையும், ஒளிகொள - ஒளியுண்டாகும்படி, வீடில் ஒருவன் - தொழிலை விடாதியற்றுகின்ற ஒருவனாலே, விசிறும் வளையமும் - சுழற்றி எறியப்படுகின்ற வளையத்தையும், ஆடும் துகளும் - காற்றாலே | |
| (பாடம்) 1 விசிறு | | |
|
|