பக்கம் : 1194 | | பாழாம் இலக்கம் எண்பத்துநான்கு - இலக்கத்தோடு முடிகிற எண்பத்துநான்கு என்றபடி. பாழ்ஆம் - முடிவு ஆம். எனவே, எண்பத்துநான்கு நூறாயிரம் என்றவாறாயிற்று. போழ் - பிரிவு. படலம் - பகுதி. “ஏழாய் அவை விரிந்து எண்பத்துநான்கு நூறாயிரமாம் போழாம் அவற்றப் புரையின் விகற்பம்Ó என்றார் நீலகேசியினும். | (813) | | நரகங்களின் பெயர் | 1924. | இருளி னிருளு மிருளும் புகையும் அருளி லளறு மணலும் பரலும் மருளின் மணியு மெனவிப் பெயர பொருளி 1னரகங்கள் போதரக் கொண்ணீ. | (இ - ள்.) இருளின் இருளும் - பேரிருளும், இருளும் - இருளும், புகையும் - புகையும் அருள் இல் அளறும் - அருட்பண்பிலாத சேறும், மணலும் - மணலும், பரலும் - பரற்கற்களும், மருளின் மணியும் - வியப்புடைய மணியும், என இப்பெயர - என்று கூறப்படுகின்ற இவ்வேழு பெயர்களை உடையன, பொருள்இல் நரகங்கள் - சிறந்த பொருள் இல்லாத இந்த நரகங்கள், போதரக்கொள் நீ - இவற்றை உள்ளத்தே புகுத நீ உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) இருளின் இருள் - தமத்தமப்பிரபை, இருள் - தமப்பிரபை, புகை - தூமப்பிரபை, அளறு - பங்கப்பிரபை, மணல் - வாலுகாப் பிரபை, பரல் - சர்சராப் பிரபை, மணி - ரத்னப் பிரபை, என்பனவாம். இவை நரகங்களின் பெயர் என்க. | (814) | | 1925. | ஆங்க ணரக மடைந்தார் படுதுயர் ஈங்க ணுரைப்பி னெமக்கும் 2பனிவரும் வாங்கி யவற்றின் முதலதன் வார்த்தைகள் பாங்கின் மொழிவன் பனிமலர்த் தாரோய் | (இ - ள்.) ஆங்கண் - அவ்விடத்தே, நரகம் அடைந்தார் - அந்நரகங்களை அடைந்தவர்கள், படுதுயர் - நுகரா நிற்கும் துன்பங்களை, ஈங்கண் உரைப்பினும் - இவ்விடத்தே யாம் கூறுமிடத்தும், எமக்கும் பனிவரும் - எனக்கும் துன்பமுண்டாம், அவற்றின் முதலதன் - அந்நரகத்தில் முதலாவதாகிய பேரிருருளைப்பற்றிய, வார்த்தைகள் வாங்கி - மொழிகளை எடுத்து, பாங்கின் - முறையாலே, மொழிவன் - கூறுவேன், பனிமலர்த் தாரோய் - குளிர்ந்த மலர்மாலையையுடைய வேந்தனே, (எ - று.) முதலது - பேரிருள் (தமத்தமப்பிரபை.) உரைப்பினும் - என்ற தன்கண் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. எமக்கும் என்றது - இன்பதுன்பம் ஒரீஇய துறவியாகிய எமக்கும் என்றவாறு. உம்மை சிறப்பும்மை. | (815) | |
| (பாடம்) 1 னரகர்கள். 2பணிவரும். | | |
|
|