பக்கம் : 1195 | | | 1926. | 1பத்தடம் பத்தொடு மூன்றா மவற்றிடை ஒத்த வுறையு ளிலக்கமொர் முப்பது 2கொத்தெரி வெம்பவர் கும்பிக் குழியவை இத்துணை யென்பதொ ரெல்லை யிலவே. | (இ - ள்.) பத்தடம் - அம்முதல் நரகத்தில் புரை, பத்தொடு மூன்றாம் - பதின்மூன்றாகும், ஒத்த உறையுள் - உயிர்கள் வாழும் இடங்கள், இலக்கம் ஒர்முப்பது - முப்பது நூறாயிரமாம், கொத்து எரிவெம்பு அவர் - கொத்தாக எரிகின்ற நெருப்புகளிலே வேவாநின்ற அந்நரகர்கள் அழுந்தும், கும்பிக்குழி யவை - சேற்றுக்குழிகளோ எனில், இத்துணை என்பதோர் எல்லைஇல - இவ்வளவின என்னும் ஒரு வரையறையுடையன அல்லவாம், (எ - று.) புத்தடம் - புரை; அடுக்கு அந்நகரத்தே பதின்மூன்று புரையும் முப்பது நூறாயிரம் உறையுளும் எல்லையில்லாத கும்பிக்குழிகளும் உள்ளன என்க. “ஒன்று மூன்றைந்து மேழுமொன்பதும் பத்தோடுஒன்று நின்ற மூன்றொடுபத்து நிரயத்துப் புரைகள் மேன்மேல்Ó என்றார் பிறரும் (மேரு - 937) | (816) | | 1927. | பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும் தாழிப் பதலையும் போலுந் தகையன ஆழப் பரந்த வழுக லளறவை பீழைப் பதகர் பிறக்கு மிடமே. | |
| (பாடம்) 1 பத்தொடை டம்பத்தொடு. 2 தொத்தெரி வெம்ப வரும்பி. | | |
|
|