பக்கம் : 1196 | | (இ - ள்.) பேழைப் பிளவும் - பெட்டிகளைப்போன்று திறந்து மூடும் வாய்களையும், பிலத்தின் முகங்களும் - குகை போன்ற இருண்ட வாயையும், தாழிப் பதலையும் - தாழியாகிய பதலை என்னும் பாண்டத்தின் வாயையும், போலும் தகையன - போன்ற தகுதியுடைய வாய்களையுமுடைய, ஆழப் பரந்த - ஆழ்ந்தகன்ற, அழுகல் அளறு அவை - அழுகற்பொருள் நிறைந்த அந்நரகங்கள், பீழைப்பதகர் - பிறவுயிர்க்கு இன்னாசெய்யும் பாவிகள், பிறக்கும் இடமே - பிறந்து வருந்துதற்குரிய இடங்களாகும், (எ - று.) பேழைப் பிளவு - பேழையைப் போன்ற பெரிய வாய். பிளவும் முகங்களும் போலும் தகையன அழுகலளறு. பீழைப் பதகர் பிறக்கும் இடம் என்றார், என்க. | (817) | | 1928. | குழிபடு கும்பிக் கருவாய் பெருகி அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால் வழுவி யனல்படு பாறைக்கண் 1வைகிப் புழுவி னுருள்வ பொரிவ பொடிவ. | (இ - ள்.) குழிபடு கும்பி - குழியில் நிறைந்துள்ள கும்பியின், கருவாய் பெருகி - பிறப்பின் வாயிலாய்ப் புகுந்து நிறைந்துள்ள, அழுகல் உடம்பு இவை - அழுகிய உடம்பையுடைய இவ்வுயிர்கள், அங்கு நிறைந்தால்- அக்குழி யிடமிலாதபடி நிறைந்தவிடத்தே, வழுவி - அவற்றினின்றும் விலகி, அனல்படு பாறைக்கண் வைகி - நெருப்புடைய பாறைக்கற்களின் மேலே தங்கி, புழுவின் - புழுக்களைப்போன்று, பொரிவ - பொரிந்து வருந்து வனவும், பொடிவ - துகளாய்ப் போவனவும் ஆம், (எ - று.) அக் கும்பிகளிடமில்லாதபடி அவ்வுயிர்கள் நிறைந்துவிட்டால், பின்னர் நெருப்புப் பாறைகளின்மேற் றங்கி புழுக்களைப் போன்று உருண்டும் பொரிந்தும் பொடிவனவாம் என்க. | (818) | | 1929. | புழுவி னுருண்டு பொடிந்தவர் பொங்கி எழுவர் 2புகைஇந் தெழுந்தபின் மீட்டும் வழுவினர் வீழ்வர் 3மறிந்துமவ் வாறே ஒழிவிலா தேனை யுள்ளள வெல்லாம். | (இ - ள்.) புழுவின் உருண்டு பொடிந்தவர் - அவ்வாறு புழுப்போலே பாறையின் உருண்டு துகளாயவர், பொங்கி - துன்பம் நிறையப்பெற்று, எழுவர் - மீளவும் எழாநிற்பர், புகைஇந்து - நெஞ்சம் புகைந்து, எழுந்த பின் - எழுந்த பின்னர், மீட்டும் - மீளவும், வழுவினர் வீழ்வர் - வழுக்கி வீழா நிற்பர், மறிந்தும் அவ்வாறே - மறுபடியும் அவ்வண்ணமே, ஒழிவிலாது ஏனை உள்ளளவு எல்லாம் - ஓய்வின்றித் தாம் ஆங்கிருத்தற்கு எஞ்சிய காலமெல்லாம், (எ - று.) | |
| (பாடம்) 1 மீது. 2புகையைந். 3பெயர்த்து மவ். சூ.- 76 | | |
|
|