பக்கம் : 1197 | | அங்ஙனம் உருண்டவர் மீண்டும் பொங்கி எழுவர், மீண்டும் வழுவி வீழ்வர் மீண்டும் அவ்வாறே, என்க. | (819) | | 1930. | அந்தோ வறனே யெனவழைப் பார்களை வந்தோ மெனச்சொல்லி வாங்கு பவரில்லை வெந்தே விளிந்து மொழியார் விழுந்துயர் ழுந்தே 1வினைய முயன்றனர் புக்கார். | (இ - ள்.) அந்தோ அறனே என அழைப்பார்களை - ஐயகோ இஃது அறமோ என்று தம் துயர் தவிர்க்கும்படி கூவி ஓலமிடுகின்ற அந் நரகர்களை, வந்தோம் எனச்சொல்லி - வருந்தற்க இதோ நும்மைக் காப்பாற்ற வந்துள்ளேம் என ஆறுதல் கூறி, வாங்குபவர் இல்லை - தம்மை எடுப்பாரையும் இலராய், வெந்தே - அத்தீயிற் கிடந்து வெந்தும், விளிந்தும் ஒழியார் - இறந்தொழிவாருமல்லர், முந்தே விழுத்துயர் இனைய முயன்றனர் புக்கார் - அவர்கள் யார் எனில் முன்பிறவிகளிலே பெருந்துயர் இவை போல்வனவற்றைப பிற உயிர்க்கு முயன்று செய்து அத்தீவினையால் இந்நரகத்தே புகுந்தவர்கள், (எ - று.) அந்நரகத்தே கிடந்து வருந்துபவர் துயரம் பொறாது அந்தோ அறனே என்று அழைக்குமிடத்தும் அவர்க்குப் புகலாவார் ஒருவரையும் பெறாராய் வேகாநிற்பர்; இறந்தொழிவாருமல்லர். இவ்வாறு வருந்துவார் யாரெனில் முற்பிறவிகளிலே பிறவுயிர்கட்கு இன்னா செய்தார் என்க. | (820) | | 1931. | அன்னணம் வேதனை யெய்து 2மவர்களைத் துன்னி யுளர்சிலர் 3தூர்த்தத் தொழிலவர் முன்னதிற் செய்த வினையின் முறைபல இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார். | (இ - ள்.) அன்னணம் வேதனை எய்தும் அவர்களை - அவ்வாறு துன்பமுறும் அந்நரகர்களை, துன்னி உளர்சிலர் - நெருங்கி உளராகிய சிற்சிலர், தூர்த்தம் தொழிலவர் - தீத் தொழிலையே செய்தவராகிய நீவிர், முன்னதிற் செய்த வினையின் முறை - முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயனாகிய முறைமையுடைய, பல இன்னணம் - பல்வேறு துயரங்களையும் இவ்வாறே, எய்துமின் என்று - நுகருங்கோள் என்று கூறிக் கடிந்து, இடர் செய்வார் - மேலும் துன்புறுத்தா நிற்பர், (எ - று.) அங்ஙனம் இடர் செய்வார் எமபடர் என்க. | |
| (பாடம்) 1விளைய. 2பவர்களை. 3துற்றத்தொழிலவர். தூற்றத்தொழிலவர். | | |
|
|