பக்கம் : 1198 | | அவ்வாறு வேதனை எய்தும் அவர்களை எமபடர் முன் செய்த தீவினைப் பயனை இவ்வாறு நுகர்மின் என்று மேலும் இன்னா செய்வர் என்க. | (821) | | 1932. | தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை அங்கு மகிழ்ந்தா னவளிவள் காணெனச் செங்கன லேயென வெம்பிய 1செம்பினில் பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார். | (இ - ள்.) இருள் தங்கு போதில் - இருள் வதிகின்ற இராக்காலத்தே, அயன்மனைத் தலைச்சென்று - அயலான் இல்லத்தே சென்று, அங்கு மகிழ்ந்தாளவள் - அவ்விடத்தேயுள்ள பிறனோடு கூடிக் களித்தவளாகிய, இவள்காண் என - இவளைக் காணுங்கோள் என்று கூறி, செங்கனலே என செவ்விய தீப்பிழம்பைப் போன்று, வெம்பிய - உருகிய, செம்பினில் பொங்கு அனற்பாவைகள் - செம்பாலியன்ற பொங்கும் நெருப்புப் படிவங்களை, புல்லப் புணர்ப்பார் - தழுவும்படி செய்வார், (எ - று.) இரவில், பிறன்மனை புக்குப் பிறனோடு களித்தவளாகிய இவள் படும்பாட்டைப் பாருங்கோள் என்று கூறி, அத்தகைய மகளிரை நெருப்புப் பாவைகளோடு புணர்த்துவரென்க. | (822) | | 1933. | கொள்ளு மிவையெக் கூட்டில் வளர்த்ததம் வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள் அள்ளிக் கதுவ வலறி 2யயலது முள்ளிற் புனைமர மேற முயல்வார். | (இ - ள்.) தம் கூட்டில் வளர்த்த - தம்முடைய கூடுகளிலே அடைத்து வளர்க்கப்பட்ட, வள்ளுகிர் பேழ்வாய் ஞமலி - வளைந்த நகங்களையும் பெரிய வாயையுமுடைய நாய்களை, கொள்ளும் இவையென -- இவையிற்றை இரையாகத் தின்னுங்கோள் என ஏவ, வடிவுகள் அள்ளிக் கதுவ - அந்நாய்கள் பசியோடே ஆங்குள்ளாரின் உடல்களை வாயாலே அள்ளிக்கொண்டு கவ்வாநிற்ப, அலறி - ஆற்றாது அழுது, அயலது - பக்கத்தே உளதாகிய, முள்ளிற் புனைமரம் - முட்களோடே செய்தமைத்த மரங்களின் மேலே, ஏற முயல்வார் - அந்நாய்களுக்குத் தப்புமாறு ஏறுவதற்கு விரைவார், (எ - று.) எமபடர், தம் கூட்டிலடைத்த நாய்களைத் திறந்துவிட்டு இவர்களைத் தின்னுமின் என்று ஏவுதலாலே, அந்நாய் அவர்கள் தசையினைக் கவ்வ, ஆற்றாராய் அயலுள்ள முண்மரத்தே ஏறிஉய்வேம் என்று ஓடாநிற்பர் என்க. | (823) | |
| (பாடம்) 1செம்பினை. 2 யவலது. | | |
|
|