பக்கம் : 1199
 
 
1934. மேயப் பருவம் விரும்பிய மீனினம்
காயப் பெருந்தடி காண்மி 1னிவையெனத்
தீயைப் பருகிய செப்புத் திரளவை
வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார்.
 
     (இ - ள்.) மேய அப்பருவம் விரும்பிய மீன் இனம் - நும்மொடு பொருந்தி நின்ற
அவ்விளம் பருவத்திலே நும்மால் விரும்பப்பட்ட மீனினங்களின், காயப் பெருந்தடி இவை
காண்மின் என - உடலிலுள்ள பெரிய ஊன் திளராகிய இவற்றைக் காணுங்கோள் என்று
காட்டி, தீயைப்பருகிய செம்புத் திரளவை - தீயுண்ட செம்புருக்குத் திரள்களை, வாயைப்
பெருகப் பிளந்து - இந்நரகர்களின் வாய்களை அகல விரியச்செய்து, மடுப்பார்,
அவ்வாயினுள் செலுத்தா நிற்பர், (எ - று.)

     மேய அப்பருவம் - மேயப்பருவம் என விகாரமெய்திற்று.

     நரகர்களே! நீயிர் விரும்பியுண்ணும் மீனினங்களின் உடற்றசைகள் இவை காண்மின்
என்று கூறி, உருக்கிய செப்புத்திரளை அவர் வாயிடத்தே மடுப்பர் என்க.

(824)

 
1935. மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்தும்
கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
ஒறுப்பர் சிலரை யவரு மொருபால்.
 
     (இ - ள்.) பல கறி வெஃகி - பல்வேறு இறைச்சிகளையும் உண்ண விரும்பி,
பலமறிகொன்றும் - பற்பல ஆடுகளைக்கொன்றும், மடப்பிணை வீழ்த்தும் - இளமையுடைய
பெண் மான்களை வதைத்தும், கறித்தவர்தம்மை - தின்றவர்களை, உறுப்பு உறுப்பாக
அரிந்து அரிந்து ஊட்டி - கை கால் முதலிய உறுப்புக்களை ஒவ்வொன்றாக அரிந்து
அவற்றைத் தின்னும்படி செய்து, சிலரை - அவருட் சிற்சிலரைத் துன்புறுத்தா நிற்பர்,
அவரும் ஒருபால் - அத்தகையோரும் ஒருசார் உளராவர், (எ - று.)

     மான் ஆடு முதலியவற்றைக் கொன்று அவையிற்றின் இறைச்சியை விரும்பித்
தின்றோரை, அவருடற்றசையை அரிந்து அவர் வாயினூட்டித் தின்னுக என ஒறுப்பர் என்க.

(825)

 
1936. 2இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை
உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான்
முடைப்பொலி மேனியை முண்மத் திகையால்
புடைப்ப நடுங்கிப் புரளவ ரொருசார்.
 
 

     (பாடம்) 1 னவையெனத். 2இடைப்பிற.