பக்கம் : 120
 

உரைப்பினுமாம். முற்பிறப்பிலே தேவலோகத்தில் வாழ்ந்த உயிர் பிற்பிறப்பில் இம்மகளாகப்
பிறந்ததென்பார், “ஏமநல்லுலகின் னிழிந்து தோன்றினாள்“ என்றார். உலகின்னிழிந்து:
னகரமெய் விரித்தல் விகாரம். ஸ்வயம்பிரபா - என்னும் வடசொல் இயற்கை
யொளியுடையாள் என்று பொருள்தரும்.
 

( 32 )

சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு

151. கங்கை நீரன ஞான்ற கதிரிளந்
திங்க ளாற்றொழப் பட்டது செக்கர்வான்
மங்கை மார்பிறப் பும்மட மாதரிந்
நங்கை யாற்றொழப் பாடு நவின்றதே.
 

     (இ - ள்.) செக்கர்வான் - செவ்வானமானது; கங்கை நீரன - கங்கையாற்றின்
நீரைப்போல்; ஞான்ற - ஒழுகிய; கதிர் - ஒளிகளையுடைய; இளந் திங்களால் - பிறைத்
திங்களினால்; தொழப்பட்டது - வணங்கப் பெற்றது; அதைப்போல; மங்கைமார் பிறப்பும் -
பெண்களின் பிறப்பும்; மடமாதர் இந் நங்கையால் - மடமையையும் அழகையுமுடைய
இச்சிறந்த பெண்ணால்; தொழப்பாடு நவின்றது - வணங்கப்படுதற் றன்மையைப் பெற்றது,
(எ - று.)

     தன்கண் பிறைதோன்றலால் செக்கர்வானம் தொழப்படுகின்றது. தன்கண் சுயம்பிரபை தோன்றலால் பெண்குலம்தொழுந் தகுதியுடைத்தாயிற்று என்பது கருத்து. ஞான்ற - நான்ற; முதற்போலி. நால்; பகுதி. மாலைப்பொழுதில் பிறையைத் தொழுதல் மரபு. மடமாதர் - மடமையையுடைய மாதர். மடமையாவது எல்லாம் அறிந்தும் ஒன்றையும் அறியாது போன்றிருக்குந் தன்மை.
 

( 33 )

முகம் கண் புருவம் இடை ஆகியவைகள்

152. வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
1கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
உண்டு கொல்லென வுண்டும ருங்குலே.
 

     (இ - ள்.) குண்டல வாள்முகம் - காதணியின் ஒளிவீசப் பெற்ற சுயம்பிரபையின்
முகம்; வண்டுசூழ் மலர்போன்று - வண்டுகள் சூழப்பெற்ற செந்தாமரை மலரைப்போல;
அளகக் கொடி கொண்டுசூழ்ந்தது - கூந்தலின்
 


     (பாடம்) 1. கெண்டை போன்றன கண் புருவச்சிலை.