பக்கம் : 1204 | | (இ - ள்.) பெய்யா அருநஞ்சும் - பிறராற் பெய்யப்படாது இயல்பின் உளவாகிய நச்சுப்பொய்கைகளும், பேர் அழல் குட்டமும் - பெரிய தீக்குழிகளும், செய்யாக் குழிகளும் - இயல்பானுளவாகிய கும்பிக்குழிகளும், சீநீர்த் தடங்களும் - சீழே நீராய் நிறைந்த குளங்களுமாகிய, நையா நரகர் இடம் இவை - துயரத்தாலே உடலும் உளமும் நையும் நரகர் வதியும் இவ்விடங்களின், நாறினும் - தீநாற்றம் பட்டாலும், ஓசனைக்கண்ணே - நான்கு காவதத்தொலைவின்கண் உள்ள, பிறவுயிர் - இந்நரகரல்லாத ஏனைய உயிர்கள், உய்யா - உயிர்த்திரா (இறக்கும் என்றபடி) நாறினும் என்ற வும்மை, சிறப்பும்மை. நஞ்சும் அழற்குட்டமும் சீழ்த்தடங்களும் ஆகிய இந்நரகத்தின் நாற்றத்தை ஒரு யோசனைத் தொலைவிடத்தே நின்று நுகரினும் ஏனைய உயிர்கள் இறந்துபடும் என்க. அந்நாற்றத்தின் மிகுதியும் கொடுமையும் கூறியவாறு. | (835) | | 1946. | எழுவின் முழமூன் றறுவிர லென்ப வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார் ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன் முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே. | (இ - ள்.) வழுவின் முதல் வாழ்வார் - குற்றமள்ள முதல் நரகத்தின் வாழ்வோருடைய உடலின் உயரத்திற்குப் பேரெல்லை, எழுவில் முழ மூன்று அறுவிரல் என்ப - ஏழுவில் மூன்று முழம் ஆறுவிரல் என்று கூறுவர்; அதன் கீழ்ப்புரை வாழ்வார் - அக்கடைசி நரகத்தில் உள்ள ஒற்றைப்புரையில் வாழும் நரகர் உடல் உயரத்தின் பேரெல்லை, முழுவில் ஐஞ்நூறு - ஐந்நூறுவில் என்று கூறுவர், ஒழிவில ஓசனை ஏழ்மேல் பொங்குவர் - இவற்றுள் முதல் நரகத்தினர் இடையறாதனவாகிய ஏழுயோசனை உயரம் வானத்தே இயங்கி உயர்வர், மூக்காவதம் - கீழ்நரகத்தினர் முக்காவத உயரம் இயங்கி உயர்வர், (எ - று.) முதலதன்கண் வாழ்வார் உயரம் ஏழுவில் மூன்றுமுழம் ஆறுவிரல், இறுதி நரகில் வாழ்வார் உயரம் ஐந்நூறுவில், முதல் நரகின் உயரம் ஏழுயோசனை கீழ்நரகின் உயரம் முக்காவதம், என்றவாறு. இங்ஙனம் கொண்டுகூட்டிப் பொருள் கூறாதவிடத்து இது மற்றை நூல்களோடு முரணுகின்றது; ஆகலின் மற்றை நூலோடு பொருந்துமாறு இங்ஙனம் கூறினோம். | (836) | | 1947. | 1ஆண்டுச் சிறுமை பதினா யிரமுள 2நீண்டவர் வாழ்நா 3ணிறைவு கடலெல்லை ஈண்டிதன் கீழ்க்கீழ்ப் பெருகிவரு மெங்கும் வேண்டிற் சிறுமைதம் மேலோர் நிறைவே. | |
| (பாடம்) 1 யாண்டுச் சிறுமை 2 ஆண்டவர். 3 பெருமை. | | |
|
|