பக்கம் : 1208 | | | 1953. | நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத் தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும் புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத் தல்லறஞ் செய்யு மறிவில் லவரும் | (இ - ள்.) நல்லறம் காய்ந்து - உயரிய அறச்செயல்களை வெறுத்து, நலிந்து பொருள் படைத்து - பிறவுயிர்கட்கு இன்னா செய்தும் தம்முடம்பு செற்றும் அதன்வழிப் பொருள் ஈட்டி, இல்லறம் செய்யாது - இல்லறத்தார்க்குரிய அறங்களையும் செய்யாதவராய், இறுகுமவர்களும் - உலோபத்தால் வலிந்த மனத்தை யுடையோரும், புல்லறம் புல்லாப் புலவரை - மற்நெறிச் செல்லாத அறிஞரை, வைதுரைத்து - வசைபேசி, அல்லறம் செய்யும் - தீவினையே செய்கின்ற, அறிவில்லவரும் - பேதைகளும், (எ - று.) மறநெறியிலே பொருளீட்டுவோரும் அறஞ்செய்யாக் கயவரும் புலவரை வைவோரும் அல்லறஞ் செய்யும் அறிவிலிகளும் (நரக கதி எய்துவர்) என்க. | (843) | | 1954. | தெண்டிரை வாழுந் 1திமிலுங் கலங்களும் 2கொண்டிரை யாக வுயிர்கொல்லுஞ் சாதியும் 3கண்டிடு காதனை நின்னாற் செயப்படும் தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ. | (இ - ள்.) தெண்திரை வாழும் - தெளிந்த திரைகளையுடைய கடற்கரையிலே வாழ்கின்ற, திமிலும் - தோணிகளையும், கலங்களும் - பெரிய மரக்கலங்களையும், கொண்டு - கருவிகளாகக்கொண்டு, இரையாக - தமக்கும் பிறர்க்கும் இரையாகும் பொருட்டு, உயிர்கொல்லும் சாதியும் - நீர்வாழும் உயிர்களைக் கொல்லாநின்ற பரதவர் முதலிய வகுப்பினரையும், கண்டிடுகாதனை - சான்று முதலியவற்றால், ஆராய்ந்து காணப்பட்ட கொலை முதலியவற்றால் நின்னாற் செய்யப்படும், தண்டிகள் - அரசனாகிய நின்னால் முறை செய்து ஒறுக்கப்பட்டவர்களோடே, சார்த்தினை - கூட்டி, கொண்ணீ - அந்நரகில் வீழ்வோராக நீ கொள்வாயாக, (எ - று.) காதனை - கொலை. திமில் முதலியவற்றால் மீன் முதலியவற்றைக் கொல்வோரும் அரசராற் றண்டனை பெறற்குரிய கொலைஞரும் நரகில் வீழ்வார் என்க. | (844) | |
| (பாடம்) 1 திமிசுங். 2 கொண்டிசை. 3 கண்டசோதனை. | | |
|
|