பக்கம் : 1211 | | (இ - ள்.) ஓர் அறிவாகி உழக்கும் உயிர்களைப் பேர் அறிவாரும் பிறரில்லை - ஒன்றறி உயிராய்ப்பிறந்து துன்புறும் புல்லும் மரமும் செடியும் கொடியும் பிறவுமாய இவையிற்றின் பெயர்களைத்தாமும் முழுதும் அறிவார் யாரும் உலகின் இல்லை, இன்னவை யார் அறிவார் - இவற்றை யாரே தான் அறிய வல்லுநர், அழியும் திறம் யாது எனில் - இவை எவ்வாற்றான் அழிவெய்துவனவோ என்று வினவில், கூர் அறிவு இல்லவர் கொன்றிடுகின்றார் - இவையும் உயிர் இனமே என்றறியும் கூர்த்தமதியில்லாப் பேதைகள் இவற்றை அழித்துவிடுகின்றனர், (எ - று.) புல் மர முதலிய ஒன்றறி உயிர்களின் விகற்பங்கள் எண்ணில, அவற்றின் பெயர் அறிதலும் இயலாது, இவையிற்றை அறிவில்லவர் கொன்றழிப்பர், என்க. | (848) | | இதுவுமது | 1959. | உயிர்த்தொகை யாறனு ளொன்றொழித் தேனைப் பெயர்த்தொகை பெற்ற பிறவிக டம்மைப் பயிர்த்தலு 1மின்றி யுலகம் பதைப்பச் செயிர்த்தவர் போலச் 2செகுத்திடுங் கண்டாய். | (இ - ள்.) உயிர்த்தொகை ஆறனுள் ஒன்று ஒழித்து - உயிர்களின் பிறப்பின் தொகையாகிய ஆறில் ஒன்று அறிவுயிராகிய தம்மினம் ஒழிய, ஏனைப் பெயர்த்தொகை பெற்ற - எஞ்சிய இரண்டறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக உள்ள பெயர்களாலே தொகுத்துக் கூறப்பட்ட, பிறவிகள் - இயங்கியற் பிறவிகள் தம்மை - நிலையியற் பிறவியாகிய தங்களை, பயிர்த்தலும் இன்றி - தம்மிடத்தே குற்றமில்லாதிருந்தும், உலகம் பதைப்ப - அறிஞர்கள் நடுங்குமாறு, செயிர்த்தவர்போல - பகைகொண்டவரைப்போன்று, செகுத்திடும் கண்டாய் - அழித்தொழிக்கும், கண்டாய்: முன்னிலை அசை, (எ - று.) ஒன்றறிவுயிரை, ஏனைய எல்லா வுயிரும் செகுத்திடும் என்க. | (849) | | 1960. | ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள் ஆனை முதலா வளிய விலங்குகள் 3மானுடர் பற்றி வலிந்து நலிந்திட ஊனெய் யுருகு முழக்கு மொருபால். | |
| (பாடம்) 1 மன்றி. 2 செத்திடுங். 3அடிகுறிப்பு தரப்படவில்லை. | | |
|
|