பக்கம் : 1212 | | (இ - ள்.) ஏனை ஒழிந்த இயங்கு நற்சாதியுள் - புல் முதலிய நிலையியற் பிறப்பின் வேறாய் எஞ்சிய இயங்கு இயற் பிறப்பாகிய நல்ல வகையினவாகிய, ஆனை முதலா அளிய விலங்குகள் - யானை முதலிய இரங்கத்தக்க விலங்குகளும், மானிடர் பற்றி வலிந்து நலிந்திட - மனிதர்கள் வலிந்து பிடித்துத் துன்புறுத்தா நிற்ப, ஊன் நெய் உருகும் - தம்முடலின் ஊன்கள் நெய்யாய் உருகுவனவாய், உழக்கும் ஒருபால் - துன்பமுழப்பனவாம் ஒரு பக்கத்தே, (எ - று.) இரண்டறி வுயிர் முதலிய இயங்கியற் பிறவிகள் கொடிய மானிடர் பற்றி நலிய உருகித் துன்புழக்கும் என்க | (850) | | 1961. | ஊர்ந்து முழுது முறுபார மேந்தியும் சாய்ந்த விலங்குக டாளுடைந் தாழ்தர வீர்ந்து 1மறுத்து மிறைச்சி யுவப்பவர் தேர்ந்து செகுப்பவுந் தேயுஞ் சிலவே. | (இ - ள்.) ஊர்ந்தும் - ஒருசார் ஊர்திகளாய்க் கொண்டு மனிதர்கள் தம்மேலிருந்து செலுத்தலாலும், உழுதும் - உழுதொழில் செய்தலாலும், உறு பாரம் ஏந்தியும் - மிகையாய சுமைகளைச் சுமத்தலாலும், சாய்ந்த விலங்குகள் - ஆற்றாது இளைத்து வீழ்ந்த விலங்குகள், தாள் உடைந்து - கால் என்புகள் முறிந்து, ஆழ்தர - துன்பத்துள்ளே அழுந்தா நிற்ப, ஈர்ந்தும் அறுத்தும் - பிளந்தும் அரிந்தும், இறைச்சி உவப்பவர் - தம்மிறைச்சியைத் தின்று மகிழும் மனிதர்கள், தேர்ந்து - பருவத்தை ஆராய்ந்து, செகுப்பவும் - கொல்லா நிற்பவும், தேயும் சில - சில விலங்குகள் அழிந்தொழியும், (எ - று.) ஊர்ந்தும் பாரமேந்தியும் விலங்குகள் தாள் உடைந்து இன்னலுறும், மேலும் இறைச்சி தின்போர் அவையிற்றை அரிந்தும் அறுத்தும் செகுப்பவும் தேயும் என்க. | (851) | | 1962. | தடிவிலை வாழ்நர் தடிந்திடப் பட்டு முடிவலை வாழ்நர் முருக்க முரிந்தும் கொடுவி 2லெயினர்கள் கொல்லக் குறைந்தும் விடலில வேதனை வேந்த விலங்கே. | (இ - ள்.) தடிவிலை வாழ்நர் - ஊன்விற்றுப் பிழைப்போரால், தடிந்திடப்பட்டும் - கொல்லப்பட்டும், முடிவலை வாழ்நர் - முடிதற் றொழிலையுடைய வலையாலே வாழ்கின்றவராகிய பரதவர் முதலியோரால், முருக்க முரிந்தும் - கொல்லப்பட்டிறந்தும், கொடுவில் எயினர்கள் - வளைந்த வில்லையுடைய வேடர்கள், கொல்லக்குறைந்தும் - கொல்லுதலாலே அழிந்தும், வேதனைவிடல் இல - துயரத்தை ஒழியமாட்டா, விலங்கே - விலங்குகள், வேந்தே -அரசனே, (எ - று.) | |
| (பாடம்) 1மறித்தும். 2 லெயினவர், லெயினர். | | |
|
|