பக்கம் : 1213
 

     அரசனே அவ்வுயிர்கள் தடிந்திடப்பட்டும் முருக்கமுரிந்தும் கொல்லக் குறைந்தும்
வேதனை விடலில என்றார் என்க.

(852)
 
1963. அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும்
நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு
வந்தோ மெனநின்ற 1மாண்புடை யார்களும்
உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார்.
 
      (இ - ள்.) அந்தோ அளிய விலங்குகள் - ஐயகோ! அளிக்கத்தக்க அவ்வெளிய
விலங்கினங்கள், யார் கண்ணும் - எத்திறத்தோரிடத்தும், நொந்தோம் எனச் சென்று -
துன்புற்றோம் என்று கருதிச்சென்று, நோக்கின் - அவர் தமக்கு இரங்குவார் என
நோக்கியவிடத்தும், நுனிப்பொடு - ஆராய்ச்சி அறிவோடே, உய்ந்து வந்தோம் எனநின்ற -
தீவிைனைகளிற் றப்பி உயர்ந்து வந்தோம் என்று தம்மை எண்ணி நின்ற,
மாண்புடையோரும் - சான்றோரும், ஓய்ந்து ஒழிய - அவ்விலங்குகள் உடல் தளர்ந்து
சாகும்படி, முயன்றிடுகின்றார் - தொழில் செய்விக்க முயலா நின்றனர், (எ - று.)

     அறிவுடையோரும் விலங்கினங்களை வருத்துதல் ஒழிகிலர் என்று துறவி இரங்கினர்
என்க.

(853)

 
அவையிற்றின் துயரங்கட்கு அம்முனிவர் இரங்குதல்
1964. கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி
துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர்
என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி
2மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ.
 
     (இ - ள்.) கன்னியர் வேட்கை - மகளிரை விழைதலாகிய காமத்துன்பங்களும், கடவுள்
அரும்பிணி - ஊழான் வருந் தவிர்த்தற்கரிய துன்பங்களும், துன்னிய துன்ப விலங்கின்
சுடுதுயர் - செறிந்த துன்பத்தையுடைய விலங்குப் பிறப்பின் எய்தும் சுடுவது போன்ற
இன்னல்களும், என்னும் இவற்றினை - என்று கூறப்படும் இத்துன்பங்களை, எம்போல்பவர்
அன்றி - எம்மைப் போன்ற வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனிவர் அல்லாமல்,
மன்ன - அரசே, அறிபவர் மற்று இல்லை - உணர்கின்றவர் பிறர் யாருமிலர், (எ - று.)
 

      (பாடம்) 1 மானமுடை. 2 மன்னு மறிபவர்.