பக்கம் : 1213 | | அரசனே அவ்வுயிர்கள் தடிந்திடப்பட்டும் முருக்கமுரிந்தும் கொல்லக் குறைந்தும் வேதனை விடலில என்றார் என்க. | (852) | | 1963. | அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும் நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு வந்தோ மெனநின்ற 1மாண்புடை யார்களும் உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார். | (இ - ள்.) அந்தோ அளிய விலங்குகள் - ஐயகோ! அளிக்கத்தக்க அவ்வெளிய விலங்கினங்கள், யார் கண்ணும் - எத்திறத்தோரிடத்தும், நொந்தோம் எனச் சென்று - துன்புற்றோம் என்று கருதிச்சென்று, நோக்கின் - அவர் தமக்கு இரங்குவார் என நோக்கியவிடத்தும், நுனிப்பொடு - ஆராய்ச்சி அறிவோடே, உய்ந்து வந்தோம் எனநின்ற - தீவிைனைகளிற் றப்பி உயர்ந்து வந்தோம் என்று தம்மை எண்ணி நின்ற, மாண்புடையோரும் - சான்றோரும், ஓய்ந்து ஒழிய - அவ்விலங்குகள் உடல் தளர்ந்து சாகும்படி, முயன்றிடுகின்றார் - தொழில் செய்விக்க முயலா நின்றனர், (எ - று.) அறிவுடையோரும் விலங்கினங்களை வருத்துதல் ஒழிகிலர் என்று துறவி இரங்கினர் என்க. | (853) | | அவையிற்றின் துயரங்கட்கு அம்முனிவர் இரங்குதல் | 1964. | கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர் என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி 2மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ. | (இ - ள்.) கன்னியர் வேட்கை - மகளிரை விழைதலாகிய காமத்துன்பங்களும், கடவுள் அரும்பிணி - ஊழான் வருந் தவிர்த்தற்கரிய துன்பங்களும், துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர் - செறிந்த துன்பத்தையுடைய விலங்குப் பிறப்பின் எய்தும் சுடுவது போன்ற இன்னல்களும், என்னும் இவற்றினை - என்று கூறப்படும் இத்துன்பங்களை, எம்போல்பவர் அன்றி - எம்மைப் போன்ற வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனிவர் அல்லாமல், மன்ன - அரசே, அறிபவர் மற்று இல்லை - உணர்கின்றவர் பிறர் யாருமிலர், (எ - று.) | |
| (பாடம்) 1 மானமுடை. 2 மன்னு மறிபவர். | | |
|
|