பக்கம் : 1217
 

     (இ - ள்.) மாகம் மழை வண்கை மன்னவ - வான்கண்ணதாகிய முகில் போலும்
கைம்மாறு கருதாத வள்ளன்மையுடைய பயாபதி வேந்தே, மக்களும் - மனிதர்கள்
எல்லோரும், ஏக கதியினர் - பிறப்பானே ஒரே தன்மையுடைய ராயினும், ஏய - இசைந்த,
விகற்பினர், - வேற்றுமையுடையோர் ஆவர், சேகர் மிலைச்சர் மனிதர்கள் திப்பியர்
போகமனிதர் என - அவ்வேற்றுமை யுடையோர் சேகர் என்றும் மிலைச்சர் என்றும் மனிதர்
என்றும் திப்பியர் என்றும் போகமனிதர் என்றும் கூறப்படுகின்ற, பொருட்பட்டார் -
சொற்களுக்குப் பொருளாகப் பொருந்திய ஐவகையினருமாம், (எ - று.)

     “நல்லவர் தீயவர் திப்பியர் ஒப்பில் குமானுயரோ
     டல்ல வருள்ளுறுத் தாடவர் ஐவருளர்Ó
என்றார் நீலகேசியினும் (தருமவுரைச். 82)

     மனிதருள்ளும் ஐவகைய ருளர் என்க.

(861)

 

சேகர் இயல்பு

1972. பத்து வகைய பரதவி ரேவதத்
தத்தகு கால விழிவி னகத்தவர்
சித்தந் தெளிவிலா சீல மடைவிலர்
செத்த வறிவினர் சேக ரவரே.
 
     (இ - ள்.) பத்துவகைய - பரதம் ஐந்தும் ஐராவதம் ஐந்தும் எனப் பத்து
வகையவாகியவற்றில் வைத்து, பரத இரேவதத்து - பரதகண்டம் ஐந்தனுள் வாழ்வோராய்,
அத்தகுகாலம் - அக்கண்டத்துத் தாம் வாழத்தக்க காலமெல்லாம், இழிவின் அகத்தவர் -
இழிந்த குணங்களையுடைய உள்ளமுடையோராய், சித்தம் தெளிவிலர் - அறிவு தெளியப்
பெறாதாராய், சீலம் அடைவிலர் - ஒழுக்கநெறிக்கட் சேராதவராய், செத்த அறிவினர் -
அறிவற்றவராவர், சேகர் அவரே - சேகர் என்று கூறப்படும் வகையினர்,
(எ - று.)
    
     இழிவு - அவஸர்ப்பிணி.

     இரேவதம் - கண்டம். அவை, பரதகண்டம் ஐந்தும் ஐராவதகண்டம் ஐந்தும், என்னும்
பத்து வகைப்படும். அவற்றுள் சேகர் என்பவர் பரத கண்டத்துள் வாழும் ஒரு வகை மனிதர்
என்றுணர்க. செத்த அறிவு - அறிவின்மை.

(862)

 
மிலைச்சர்
1973. தீவினுள் வாழுங் 1குமானுயர் தேசத்து
மேவி யுறையு மிலைச்ச ரெனப்பெயர்
 

     (பாடம்) 1 குமானுடர்.