பக்கம் : 1218 | | | ஆவ ரவருண் மிலைச்ச ரவரையும் வீவருந் தாரோய் விலங்கினுள் வைப்பாம். | (இ - ள்.) தீவினுள் வாழும் குமானுயர் - இனி மிலைச்சருள் வைத்துத் தீவுகளிலே வாழும் குமானுயரும், தேசத்து மேவியுறையும் மிலைச்சரும் - தேசங்களிலே பொருந்தி வாழ்கின்ற மிலைச்சர்களும், எனப்பெயர் ஆவர் - என இருவகைப் பெயர் கூறப்படுவர், அவருள் - அவ்விருவகையினருள், மிலைச்சர் அவரையும் - இரண்டாவதாகக் கூறப்பட்ட தேசத்துறையும் மிலைச்சரையும், வீவரும் தாரோய் - மலராற்புனைந்த மாலையை உடைய அரசனே, விலங்கினுள் வைப்பாம் - உருவானன்றி ஒழுக்கத்தால் வேற்றுமையின்மையால் விலங்குகள் என்றே யாம் கொள்வோம், (எ - று.) குமானுயர் இருவகைப்படுவர்; அவருள் மிலைச்சர் உருவானே மானுடராயினும் அறிவானே விலங்கென்றே கொள்ளப்படுவர் என்க. தீவு - மகாலவணம், கரளோதயம் என்னுங் கடல்களில் உள்ள தொண்ணூற்றாறு அந்தரத் தீவுகள். “வாரியுட் டீவு தொண்ணூற்றாறு மற்றைக் கண்டத்தும் சேருநர் அறத்தைச் சேரார் மிலேச்சராய்ச் செய்யப் பட்டார்Ó என்பது மேருமந்தரபுராணம் (1227). | (863) | | 1974. | வாலு நெடியர் வளைந்த வெயிற்றினர் காலுமொ ரோவொன் றுடையர் 1கலையிலர் நாலுஞ் 2செவியர் நவைசெய் மருப்பினர் சீல மடைவிலர் தீவினுள் வாழ்வார். | (இ - ள்.) தீவினுள் வாழ்வார் - தீவுகளிலே வாழ்கின்ற குமானுயர் என்னும் மனிதர்கள், வாலும் நெடியர் - நீண்ட வாலுடையரும், வளைந்த எயிற்றினர் - கோரப் பற்களையுடையவரும், காலும் ஒரோ ஒன்று உடையர் - கால் என்னும் உறுப்பும் ஒவ்வொருவர் ஒவ்வொன்றே யுடையரும், கலையிலர் - ஆடை அணியாதவரும், நாலும் செவியர் - நீண்டு தூங்கும் காதுகளை யுடையவரும், நவைசெய் மருப்பினர் - பிறவுயிர்கட்கு இன்னல் செய்கின்ற கொம்புகளையுடையவரும், சீலம் அடைவிலர் - ஒழுக்கமில்லாதவரும் ஆவர், (எ - று.) கோலமி னோன்றற் குமானுயர் தம்மையும் கூறுவன்கேள் வாலமும் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச் சீலமும் காட்சியும் தீண்டலர் அந்தரத் தீவினுள்ளார் நீலமும் வேலும் கயலும் நிகர்த்த நெடுங்கண்ணினாய். என்றார் நீலகேசியினும் (தருமவு - செய் - 76) | (864) | |
| (பாடம்) 1 ருடையிலர். 2 செவியினர். | | | | |