பக்கம் : 1219 | | | | மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது மிக்க வெளிற்று விலங்குக ளேயவர் நக்க வுருவினர் நாணா வொழுக்கினர் தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார். | (இ - ள்.) மக்கட் பிறப்பெனும் மாத்திரம் அல்லது - மக்கட் பிறப்புடையோர் என்னுந்துணையே அன்றி, அவர் - அக் குமானுயர் என்னும் மிலைச்சர்கள், வெளிற்று விலங்குகளே - அறிவற்ற விலங்கே, நக்க உருவினர் - ஆடையில்லாத உருவத்தையுடையோராய், நாணா வொழுக்கினர் - நாணமற்ற தீயொழுக்கமுடையோராய், தொக்கனர் - கூட்டமாய்க் கூடி, மண்ணே துளைத்துண்டு வாழ்வார் - மண்ணைத் தோண்டித் தின்று வாழாநின்றனர், (எ - று.) நக்கவுரு - ஆடையில்லாத உருவம். குமானுயரும் ஒருவகை விலங்கென்றே கொள்க என்பதாம், | (865) | | 1976. | பூவும் பழனு நுகர்ந்து பொழின்மரம் மேவி யுறையு மிலைச்சர் மிகப்பலர் ஓவலர் வாழ்வ தொருபளி 1தோபமென் றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ. | (இ - ள்.) பூவும் பழனும் நுகர்ந்து - மலர்களையும் பழங்களையும் தின்று, பொழில் மரம் மேவி - சோலையினுள்ள மரங்களிலே பொருந்தி, உறையும் - வாழ்கின்ற, மிலைச்சர் மிகப்பலர் - மிலைச்சர்கள் சாலப் பலராவர், ஏவல் சிலை மன்ன! - அம்பு விடுதலிலே வல்லுநனான வில்லையுடைய வேந்தனே, ஓவலர் - ஒழியாதவராய், வாழ்வது - இவர்கள் வாழ்தற்குரிய காலம், ஒரு பளிதோபம் என்று - ஒரு பல்லம் என்று, எண்ணி உணர்நீ - நீ ஆராய்ந்து அறிந்துகொள்க, (எ - று.) பளிதோபம் - பல்லம், ஓரெண். மரங்களிலே மேவிப் பூவும் பழனும் நுகர்ந்து வாழும் இம்மிலைச்சர் ஒரு பல்ல காலம் அகவையுடையோர் என்க. | (866) | | 1977. | தேச 2மிலைச்சரிற் சேர்வுடை யாரவர் மாசின் மனிதர் வடிவின ராயினும் 3கூசின் மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர் நீச ரவரையு நீரி னிழிப்பாம். | |
| (பாடம்) 1 தோமென். 2மிலைச்சரரெனப்படுவாரவர். 3கூச. | | |
|
|