பக்கம் : 122
 

சுயம்பிரபையின் அழகு

154. விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
மண்ண ணங்குற வேவளர் வெய்திய
பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
1கண்ண ணங்குறு காரிகை கண்டதே.
 

     (இ - ள்.) விண் அணங்க விழித்து - விண்ணவர்கள் வருந்தும்படி நோக்கி; விளங்கு
ஒளி - தன்மேனியில் விளங்குகின்ற ஒளியாலே; மண் அணங்கு உறவே வளர்வு எய்திய -
இம்மண்ணுலகத்தவர் வருந்துமாறு வளர்ச்சியடைகின்ற; பெண் அணங்கு இது - இந்தத்
தெய்வமாது; தோன்றிய பின் கொலோ - இவ்வுலகில் பிறந்த பிறகு தானோ; கண் -
எல்லோருடைய கண்ணும்; அணங்கு உறு காரிகை கண்டது - தாம் வருந்துதற்குக்
காரணமான அழகெனும் பொருளைக் கண்டது, (எ - று.)

     மேனியொளியும் அழகும் மிக்க இந்தச் சிறந்த பெண் தோன்றிய பின்புதானோ
கண்கள் தம்மை வருத்தும் அழகெனும் பொருளைக் கண்டனவென்றதனால், இதற்கு முன்பு
இவ்வளவு அழகு நிரம்பியவரெவரும் தோன்றினாரில்லை என்றதாயிற்று. இதுவரையிலும்
உலகத்தில் தோன்றிய மகளிர் எல்லோரினும் சுயம்பிரபை மிகுந்த பேரழகுடையவள் என்க.
 

( 36 )

 

155. கொங்கை போதரு வான்குமிழ்க் கின்றன
அங்க ரா 2கம ணிந்ததை யன்றியும்
நங்கை 3நாகரி கம்பொறை நாண்மதுத்
தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே.
 

     (இ - ள்.) நங்கை - சுயம்பிரபையை, கொங்கை போதருவான் - முலைகள்
வளர்தற்பொருட்டு; குமிழ்கின்றன - அரும்புகின்றவற்றின்மேல்; அங்கராகம் அணிந்ததை
அன்றியும் - நறுமணப்பொடிகள் பூசப்பட்ட செயலே அல்லாமலும்; நாகரிகப் பொறை -
நாகரிகங் கருதியிடப்பட்ட அணிகலச் சுமையும்; நாள் மது தங்கு வார் கொடியில்
தளர்வித்தது - புதிய தேன் தங்குதற்கிடமான நீண்ட பூங்கொடி தளருமாறு தளரச் செய்தது, (எ- று.)
 


     (பாடம்) 1. கண்ணணங்கு விழித்தது. 2. அணிந்தகையன்றியும்.3. நாகரிகம்பொறை.