சுயம்பிரபையின் அழகு |
154. | விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி மண்ண ணங்குற வேவளர் வெய்திய பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ 1கண்ண ணங்குறு காரிகை கண்டதே. |
(இ - ள்.) விண் அணங்க விழித்து - விண்ணவர்கள் வருந்தும்படி நோக்கி; விளங்கு ஒளி - தன்மேனியில் விளங்குகின்ற ஒளியாலே; மண் அணங்கு உறவே வளர்வு எய்திய - இம்மண்ணுலகத்தவர் வருந்துமாறு வளர்ச்சியடைகின்ற; பெண் அணங்கு இது - இந்தத் தெய்வமாது; தோன்றிய பின் கொலோ - இவ்வுலகில் பிறந்த பிறகு தானோ; கண் - எல்லோருடைய கண்ணும்; அணங்கு உறு காரிகை கண்டது - தாம் வருந்துதற்குக் காரணமான அழகெனும் பொருளைக் கண்டது, (எ - று.) மேனியொளியும் அழகும் மிக்க இந்தச் சிறந்த பெண் தோன்றிய பின்புதானோ கண்கள் தம்மை வருத்தும் அழகெனும் பொருளைக் கண்டனவென்றதனால், இதற்கு முன்பு இவ்வளவு அழகு நிரம்பியவரெவரும் தோன்றினாரில்லை என்றதாயிற்று. இதுவரையிலும் உலகத்தில் தோன்றிய மகளிர் எல்லோரினும் சுயம்பிரபை மிகுந்த பேரழகுடையவள் என்க. |
( 36 ) |
|
155. | கொங்கை போதரு வான்குமிழ்க் கின்றன அங்க ரா 2கம ணிந்ததை யன்றியும் நங்கை 3நாகரி கம்பொறை நாண்மதுத் தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே. |
(இ - ள்.) நங்கை - சுயம்பிரபையை, கொங்கை போதருவான் - முலைகள் வளர்தற்பொருட்டு; குமிழ்கின்றன - அரும்புகின்றவற்றின்மேல்; அங்கராகம் அணிந்ததை அன்றியும் - நறுமணப்பொடிகள் பூசப்பட்ட செயலே அல்லாமலும்; நாகரிகப் பொறை - நாகரிகங் கருதியிடப்பட்ட அணிகலச் சுமையும்; நாள் மது தங்கு வார் கொடியில் தளர்வித்தது - புதிய தேன் தங்குதற்கிடமான நீண்ட பூங்கொடி தளருமாறு தளரச் செய்தது, (எ- று.) |
|
(பாடம்) 1. கண்ணணங்கு விழித்தது. 2. அணிந்தகையன்றியும்.3. நாகரிகம்பொறை. |