பக்கம் : 1220
 

     (இ - ள்.) தேச மிலைச்சரில் சேர்வுடை யாரவர் - தேயத்தில் வாழும் இயல்புடைய
மிலைச்சர், மாசில் மனித வடிவினர் ஆயினும் - குற்றமற்ற மக்கள் வடிவமே உடையர்
எனினும், கூசுஇன் மனத்தர் - நாணம் இல்லாத மனம் உடையோர், கொடுந் தொழில்
வாழ்க்கையர் - கொடிய தீத்தொழிலையே செய்து உயிர் வாழ்வோர், நீசர் -
கயமையுடையோர், அவரையும் - ஆதலின் அம் மிலைச்சரையும், நீரின் - மக்கட் பண்பின்,
இழிப்பாம் - சேர்க்காமல் விலங்குகள் என்றே கொள்வோம், (எ - று.)

     தேச மிலைச்சரும் கூசின் மனத்தரும் கொடுந்தொழிலருமாகிய நீசராகலின் அவரும்
விலங்கே என்க.

(867)

 
1978. கூடன் மிலைச்சர் 1குமானுட ரென்றிவர்
ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில்
கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை
நாடினர் கொள்ளா நலமி லவரும்.
 
     (இ - ள்.) கூடல் மிலைச்சர் - தேசத்தினுட் கூட்டங் கூட்டமாய்க் கூடி
வாழ்வோராகிய மிலைச்சரும், குமானுயர் - தீவினுள் வாழும் குமனிதர் என்னும்
மிலைச்சரும், ஆபவர் எவர் எனில் - ஆகித் தோன்றுபவர் யாரோ என்று வினவின்,
ஏடவிழ் தாரோய் - இதழ் விரிக்கும் மலர் மாலையணிந்த மன்னனே, கோடி - மனம்
கோணி, குதர்க்கம் உரைத்து - மாறுபட்ட வெளிறு பேசி, குணங்களை நாடினர் கொள்ளா -
பயன்மிக்க நற்குணங்களை ஆராய்ந்து மேற்கொள்ளாத, நலமிலவரும் -
நன்மையில்லாதவரும், (எ - று.)

     மிலைச்சராய்ப் பிறப்போர் குதர்க்கம் உரைத்துக் குணங்கொள்ளா நலமிலவரும்,என்க.
 
     நலமிலவரும், ஆங்கவர் ஆபவர் (1980 இல்) என்று முடிவுறும்.

(868)

 
1979. அடங்கா மரபி னவர்கட் கடங்கார்
விடங்கார் மணந்த விடக்கும் பிறவும்
உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர்
தொடங்கா வினைக டொடங்கு மவரும்.
 
     (இ - ள்.) அடங்கா மரபினவர்கட்கு - தம்பால் அடக்கமிலாத முறையையுடைய தம்
பகைவர்க்கு, அடங்கார் - பகைவராயினார், கார் விடம் மணந்த - கரிய நஞ்சு கலந்த,
விடக்கும் பிறவும் - ஊன் உணவு முதலியவற்றை, உடங்கு ஆய்ந்து - வஞ்சத்தால்
இவருடன் கூடி அமய முதலியவற்றை ஆராய்ந்து, உணக்கொடுப்பாரும் - அவருண்ணும்படி கொடுப்பவர்களும், உயர்ந்தோர் தொடங்கா வினைகள்- சான்றோரால்பழித்தொதுக்கப்பட்ட
தீவினைகளை, தொடங்குமவரும் - செய்வோரும்,
(எ - று.)
 

     (பாடம்) 1 குமானுய.