பக்கம் : 1222
 

      இரண்டரைத் தீவுகளாவன:- சம்புத் தீவும், தாதகீடண்டத் தீவும் புட்கரத்தீவிற் பாதியுமாம்.

     “மக்களே போல்வர் கயவர் அவரன்ன
     ஒப்பாரி யாங்கண்ட தில்.Ó

     என்னுந் திருக்குறளை ஒப்பு நோக்குக.

(871)

 

மக்கட் பதடிகள்

1982. முக்குலத் தாரொடு மூடத் தொழுதியர்
தக்க தகாவென்ப தோராத் தகையவர்
மக்க ளெனப்படு வாரலர் மற்றவர்
பக்கங் கிடக்கும் பதரெனக் கொண்ணீ.
 
     (இ - ள்.) முக்குலத்தாரொடும் - இம்மூன்று வகை மனிதர்களோடு தோன்றியும்,
மூடத் தொழுதியர் - மூன்று வகைப்பட்ட மூடங்களையும் உடைய இக் கூட்டத்தார், தக்க
தகா என்பது ஓராத் தகையவர் - இவை செய்யத்தகும் அறச் செயல்கள்; இவை செய்யத்
தகாத மறச்செயல்கள் என்று ஆராய்ந்துணரும் தன்மையற்றவர், மக்கள் எனப்படுவார்
அலர் - இன்னராதலின் இவர்களும் மனிதர்கள் என்று கருதத் தகுந்தவர் அலலர், மற்றவர்
- அம் மனிதர்கள், பக்கம் கிடக்கும் பதர் எனக் கொள் நீ - (நெல்லினுட் பிறந்து
அவற்றயல் கிடக்கும் பதர்போன்று) பக்கத்திலே கிடக்கும் மக்கள் பதடிகள் என்று நீ
உணர்ந்து கொள்வாய், (எ - று.)

     மக்களுட் பிறந்தனரேனும் மக்கட் பண்பிலாதாரை மக்கள் என வேண்டா, மக்கட்
பதடிகள் என்க, என்றபடி.

(872)

 
1983. நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள்
இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை
எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல்
அல்லியந் தாரோ யரிது பெரிதே.
 
     (இ - ள்.) நல்ல நிலங்கள் - அறநெறி நிற்றற்கியைந்த சிறப்புடைய நாட்டிலே
பிறத்தலும், நலங்கொள் வடிவுகள் - அகம் புறங்களிலே ஊனமில்லாத மனித உடலைப்
பெறலும், இல்லை அமர்ந்துழி - இல்லறத்தை விரும்புமிடத்தே, தோன்றலும் - பிறத்தலும்,
எனஇவை - என்று கூறப்பட்ட இப் பேறுகளை, எல்லையில் யோனிகள் எல்லாம் இகந்து -
அளவிறந்த ஏனைய பிறவிகளைக் கடந்து, எய்தல் - அடைதல், அல்லியந் தாரோய் -
தாமரைமலர் மாலையை உடையோனே, பெரிது அரிது - மிக்க அருமையே யாம், (எ - று.)