பக்கம் : 1224 | | | 1986. | சார்ந்த பொழுதே தலைநாட் கருவினுள் வார்ந்து வழுவா தமைந்து 1வளரினும் ஈர்ந்தண் கமழ்நறுந் தாரோ யிடர்பல கூர்ந்து 2வருபயாங் கூற வுலவா. | (இ - ள்.) சார்ந்த பொழுதே - உயிர்கள் இவ்வுடலிற் பொருந்திய அப்பொழுதே, தலைநாட் கருவினுள் - அம் முதல் நாளிலேயே கருப்பையுணின்று, வார்ந்து - ஒழுகி, வழுவாது - (வழுவினும் வழுவும்) கெடாது, அமைந்து - அப் பையுட் பொருந்தி, வளரினும் - வளர்ந்தாலும், ஈர்ந்தண் கமழ் நறும் தாரோய் - ஈரமுடைமையோடு குளிர்ந்து மணங்கமழும் நல்ல மலர்மாலையை அணிந்த மன்னனே, இடர் பல கூர்ந்து வருப - பல்வேறு துயர்களை நுகர்ந்தே வருவனவாகும், யாம் கூறவுலவா - அவையிற்றை யாம் விரித்துக் கூற வெனில் முடிவு பெறாவாம், (எ - று.) அம் மானுடப் பிறப்பில் கருவிற்பட்டவுடனே அழிதலும் உண்டு. அழியாது வளருமிடத்தும் இடர்பல வுள என்க. | (876) | | 1987. | குழவி யருஞ்சுரஞ் சென்று குமர வழுவ 3வடவி யரிதி னிகந்தால் கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து வழுவினர் செல்வது மற்றோர் கதியே. | (இ - ள்.) குழவி அருஞ்சுரம் சென்று - குழவிப்பருவம் என்னும் கடத்தற்கரிய பாலைநிலத்தைக் கடந்து, குமர அழுவ அடவி - இளமைப் பருவம் என்னும் ஆழ்ந்த குழிகள் அமைந்த காட்டினை, அரிதின் இகந்தால - அரிதிற்சென்று கடந்தால், கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து - கிழப்பருவம் என்னும் எல்லையை அண்மி அடைந்து, வழுவினர் - அப்பருவத்தினின்றும் அகன்று இறந்தவர்கள், செல்வது மற்றோர் கதி - அடைவது வேறு பிறப்பாம், (எ - று.) இவ்வாறே பிறவி உருளையிற் சுழலும் உயிர் என்பதாம். | (877) | | மக்கள் நுகரும் இன்பத் தியல்பு | 1988. | 4ஆனை துரப்ப வரவுறை யாழ்குழி நானவிர் பற்றுபு நாலு மொருவனோர் 5தேனி னழிதுளி நக்குந் திறத்தது மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ. | |
| (பாடம்) 1 வளரிவை. 2 வருவன வுரைப்பன வுலவா 3 வடவை. 4யானை. 5தேனெய் யழிதுளி நக்கி யனையது. | | |
|
|