பக்கம் : 1225 | | (இ - ள்.) ஒருவன் - ஒருசாத்தன், ஆனைதுரப்ப - தன்னை ஒரு காட்டியானை துரத்திவர ஓடி, அரவு உறை ஆழ்குழி - நச்சுப்பாம்பு வதிகின்ற ஆழிய ஓர் கிணற்றில் வீழ்ந்து, நால்நவிர் பற்றுபு - அதனுள் தொங்குகின்ற கொடியைப் பிடித்துக்கொண்டு, நாலும் - தொங்குவானாக, ஓர் தேனின் அழிதுளி - அவ்வமயம் ஆங்குள்ள தேத்திறாலின்கண் நழுவிச் சொட்டிய தேன்றுளி ஒன்று, நக்குந் திறத்தது - தன்வாயில் வீழ அதனை இனிதெனச் சுவைத்ததை ஒப்பதாம், மானுயர் இன்பம் - பல்வேறு வகைப்பட்ட துன்பம் நிறைந்த மானிட வாழ்க்கையினூடே அவர்கள் நுகரும் இன்பம், நீ மதித்தனைகொள் - நீ இதனை ஆராய்ந்து உணர்க. யானையாற் றுரத்தப்பட்ட ஒருவன் பாழ்ங்கிணற்றிலே வீழ்ந்து, அதனுள் தூங்கும் கொடிபற்றித் தூங்குங்கால் மேலிருந்து அவன் வாயிற் சொட்டிய ஒருதுளி தேனை நக்கி அவன் இன்புற்றதைப் போலும் மானிடவாழ்க்கையில் இன்புறுதல் என்க. | (878) | | 1989. | அன்பும் பிறவு மமைந்தாங் ககத்திருந் தின்பங் கருது மிருவர்க் 1கிடைபல துன்பங்க டோன்றுந் தொடர்ப்பா டுளவெனில் முன்பவை யில்லெனின் முற்றுந் தொழிலே. | (இ - ள்.) அன்பும் பிறவும் அமைந்து - அன்பும் அறச்செயல் முதலியனவும் உண்டாகப்பெற்று, ஆங்கு அகத்திருந்து - அவ்விடத்தே இல்லத்தே இருந்து, இன்பங்கருதும் இருவர்க்கு இடை - காம வின்பத்தைக் கருதிய கிழவன் கிழத்தியாகிய இருவர் தம் வாழ்க்கையின் ஊடேயும், பல துன்பங்கள் தோன்றும் - பல்வகையான இன்னல்கள் எதிர்பாராதே வந்து இயைவனவாம், தொடர்ப்பாடு உளவெனில் - யான் எனதென்னும் இரு வகைப்பற்றும் உளவாயின், முன்பு அவை யில்லெனின் - முன்னர் அவ்விருவகைப் பற்றுக்கும் காரணமாகிய இல்லறம் இல்லாத விடத்தேயாயின், தொழில் முற்றும் - இருவினை கெட்டொழியும், தொடர்ப்பாடுளவெனில் பல துன்பங்கள் தோன்றும், இல்லெனில் தொழில் முற்றும் என்க. | (879) | மக்கள் விரதங்களால் எய்தும் பயன் | 1990. | இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர் மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது பொன்னியல் சேர்கற்ப போக 2நிலங்களில் துன்னு முயற்சி துணியுந் திறமே. | |
| (பாடம்) 1 கிடர்பல. 2 நிலங்களும். | | |
|
|