பக்கம் : 1228 | | ஏற்பவர்க்கு ஏற்ற குணம் | 1994. | துறவி யடக்கை 1பிறர்க்குநன் றாற்றல் உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென் றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங் குறைவில னேற்பவற் கேற்ற குணனே. | (இ - ள்.) துறவி - துறவுடைமை, அடக்கை - அடக்கமுடைமை, பிறர்க்கு நன்று ஆற்றல் - பிறர்க்கு இனிய செய்தல், உறவினர்க்கு ஓம்புதல் - சுற்றத்தாரைப் பேணல், மெய்த் தலைப்பாடு - மெய்யுணர்தலிற் றலைப்படுதல், என்று அறிவர் அறைந்தாங்கு அறைந்தனன் - எனச் சான்றோர் - கூறியவாறே யான் உனக்குக் கூறாநின்றேன், தான் அங்கு உறைவிலன் - ஈவோனிடத்துத்தான் சென்று உறைதலிலனாய், ஏற்பவற்கு - இரப்பவனுக்கு, ஏற்ற குணனே - தகுந்த குணங்களை, (எ - று.) துறவி - துறவு. இரப்பவன் துறவு முதலிய குணங்கள் உடையனாதல் வேண்டும் என்பதாம். | (884) | | ஈவோற்குரிய குணங்கள் | 1995. | 2போதிசை வாற்றல் பொன்று தறுகட்பம் ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி வேதமின் றீவான் குணமிவை யேழே. | (இ - ள்.) போது இசைவு - காலத்திற்கியைதலும், ஆற்றல் - ஈதற்கு வேண்டிய ஆற்றலுடைமையும், பொன்று தறுகட்பம் - வன்கண்மை யில்லாமையும் (கண்ணோட்டம் உடைமையும்), ஈதற்கு இவறுதல் - வழங்குதற்கு வேணவா உடைமையும், ஏற்பவர் மாட்டு எழு காதல் - இரப்போரிடத்துச் செல்லும் அன்புடைமையும், கழிபற்றிலாமை - தம் பொருளிடத்தே மிகையாய பற்றின்மையும், தெரிந்து அறிவு - குறிப்பால் அறிந்துணர்தலும், ஏதமின்று ஈவான்குணம் - குற்றமில்லாமல் வழங்குபவனுக்கு வேண்டிய குணங்கள், இவை ஏழே - இவ்வேழுமாம், (எ - று.) பொன்றுதறுகட்பம் என்றது தறுகண்மையின்மையை; எனவே கண்ணோட்டமுண்மையும் என்றவாறு. “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது,Ó | |
| (பாடம்) 1 பிற்றக. 2போது செய்தாற்றல். சூ - 78 | | |
|
|