பக்கம் : 1231
 
  வன்கட் 1பதகர்க்கு வான்பொருள் கைக்கொடுத்
தென்கைப் பிணகொண்மி னென்பவ னொத்தான்.
 
     (இ - ள்.) தன் கைப்பொருளும் இழந்து - தன்னுடைய கையகத்துள்ள பொருளையும் இழப்பதுமட்டும் அன்றி, தனக்கொரு புன்கதி செல்லும்வாயில் புணர்ப்பவன் - தான் எய்தி வருந்துதற்குரிய இழிந்த பிறப்பிலே புகுதற்குரிய வழிதேடிக்கொள்வானொருவன், வன்கண் பதகர்க்கு - தறுகண்மையுடைய தீவினையாளர்களுக்கு, வான்பொருள் கைக்கொடுத்து - உயரிய பொருளையும் வழங்கி, என் கைப்பணி கொண்மின் - என்னை அடிமையாய்க்கொண்டு என் பணியையும் ஏற்றுக்கொள்ளுங்கோள், என்பவன் ஒத்தான் - என்று கூறும் ஒருவனை ஒத்தவனாவான், (எ - று.)

     தன் கைப்பொருளையும் அடங்கலர்க்குத் தானங் கொடுத்திழத்த லோடன்றி, தீப்பிறப்பினும் புகுவன், தன்பொருளைக் கொடுத்துப் பிறர்க்கு அடிமை புகுபவனை ஒப்பான் என்றபடி.

(889)

 
துறவியர்க்கீந்த தானப் பயன்.
2000. ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத்
தத்துவந் தேறி யவன்செய்த 2தானங்கள்
முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன
உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ.
 
     (இ - ள்.) ஒத்த குணங்கள் அமைந்து - தானம் செய்வோர்க்குப் பொருந்திய எல்லாக்குணங்களும் நன்கு அமையப்பெற்று, தத்துவம் தேறியவன் - மெய்யுணர்ந்த ஒருவனால், உறுவர்க்கு - துறவிகளுக்கு, செய்த தானங்கள் - வழங்கப்பட்ட தானச்செயல்கள், முத்திறத்துள்ளும் படாது - செய்தவனை விலங்கும் நரகரும் மக்களுமாகிய மூவகைப் பிறப்பினுள்ளும் செல்லாதவாறு செய்து, உத்தம தேவருள் உய்க்கும் - உயரிய தேவப் பிறப்பினுள்ளே செலுத்தா நிற்கும், முடிமன்ன நீ உணர் - முடியணிந்த மன்னனே! நீ இதனை உணர்க, (எ - று.)

     “உதவி வரைத்தன் றுதவி யுதவி
     செயப்பட்டார் சால்பின் வரைத்துÓ   என்னும் திருக்குறட் கருத்தையும் ஈண்டுக் கருதுக.

     முத்திறம் - கர்ப்பம், உபவாதம் சம்மூர்ச்சனம் என்பனவுமாம்

(890)

 

     (பாடம்) 1 பதர்கட்கு. 2 தானமும்.