பக்கம் : 1235
 

     யாம் அவையிற்றை விரித்தற்கு அஞ்சுகின்றோமாயினும் ஒருவாறு கூறுவதைக்கொண்டு
உணர்க, என்பதாம்.

(895)

 

அறிவற் சிறப்பின் பயன் அறைதல்

2006 உலகங்கண் மூன்று முடைய பெருமாற்
கலகையில் பூசனை யாற்ற முயன்றால்
1திலக மிவரெனத் தேவர்க ளாவர்
விலகுஞ் சுடரொளி வீங்கெழிற் றோளாய்.
 
     (இ - ள்.) உலகங்கள் மூன்றும் உடைய பெருமாற்கு - கீழ்மேல் நடுவென்னும்
முத்திறத்துலகங்களையும் அருளாட்சியுடைய அருக பரமேட்டிக்கு, அலகைஇல் பூசனை -
எண்ணிறந்த வழிபாடுகளை, ஆற்ற முயன்றால் - இயற்றத் தொடங்குவார்களாயின்,
தேவர்கள் திலகம் இவர் என ஆவார் - தேவர்களும் இவர் எமக்குத் தலைவர் என்று
போற்றும்படி உயர்ந்த தேவராவார், விலகும் சுடர் ஒளி வீங்கு எழில் தோளாய் - விரிகின்ற
சுடராகிய ஒளியையுடைய அணிகலன் பூண்ட பருத்த அழகிய தோள்களை யுடைய
மன்னனே, (எ - று.)

     “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
     நிலமிசை நீடுவாழ் வார்Ó   என்றார் தெய்வப் புலவரும்.

(896)

 
புண்ணிய வாயில்கள் பிறவும் உளவெனல்
2007. புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை
கண்ணிய நான்கா 2யடங்கினுங் காவல
நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர்
எண்ணிய வாயில்க ளின்னு முளவே.
 
     (இ - ள்.) புண்ணிய வாயில் என - கற்ப உலகங்களை அடைதற்குரிய
நல்வினையாகிய வழிகள் என்று, நாம் - யாம், புகழ்ந்து உரை கண்ணிய - புகழ்ந்து
மொழிந்தமையாலே கருதப்பட்டவை, நான்காய் அடங்கினும் - தன்னியல் தானம் தவம்
பூசனை என்னும் நான்கு வகையானே அடங்குவனவானாலும், காவல - அரசனே, நுண்ணிய
நூல்வழி - நுண்பொருள்களையுடைய மெய்ந்நூல் வாயிலாய், நோக்கி - பார்த்து, நுனித்தவர்
- ஆராய்ந்த சான்றோர், எண்ணிய வாயில்கள் - கருதிய வழிகள், இன்னும் பல உள -
இவையிற்றின் வேறாய்ப் பலவுளவாம், (எ - று.)

(897)

 

     (பாடம்) 1 திலத. 2யடங்கு மடங்கினும்.