பக்கம் : 1237 | | பிறவுயிர் துன்புறக் காணில் அத்துன்பத்தை அகற்றி அவையிற்றை உய்யக் கோடலும் இயலாத விடத்து இரக்கமுடையனாதலும் அருளுடையான் தன்மை என்க. | (899) | | தெருளின் திறம் | 2010. | வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும் வெய்ய 1முனிதல் குளிர்தல் வெறுப்பொடு மையன்மும் 2மூடப் பகுதி மயக்கின்மை செய்ய மனத்தோர் 3தெருளின் றிறமே. | (இ - ள்.) வையினும் - பிறர் தம்மை வசைகூறிய போதும், வாழ்த்தினும் - அன்றிப் புகழ்ந்து வாழ்த்தியபோதும், வாளா விருப்பினும் - இரண்டுமன்றி வாளாவிருக்கும்போதும், வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு முறையே வெவ்வியவாகச் சினத்தலும் மகிழ்தலும் வெறுத்தலும் ஆகிய இம்மூன்றோடும், மையல் -மயக்கமின்மையும், மும்மூடப்பகுதி மயக்கு இன்மை - மூன்று மூடப்பகுதிகளால் மயக்கப்படாமையும், செய்ய மனத்தோர் - செம்மையுடைய நெஞ்சுடைய சான்றோர்களுக்குரிய, தெருளின்திறம் - தெருள் என்பதன் தன்மையாம், (எ - று.) மையல் - மோகவனீயகர்மங்கள். மும்மூடப் பகுதி :- உலக மூடம் பாசண்டிமூடம் தேவமூடம் என்பன. பிறர் தம்மை வைத விடத்தும் வாழ்த்திய விடத்தும் நிரலே விருப்பும் வெறுப்புமின்றி நெஞ்சம் சமனிலையினிற்றலும் மயக்கின்மையும், மும்மூடப் பகுதியின்மையும் தெருள் எனப்படும் என்க. | (900) | | ஆர்வமுடைமை | 2011. | அறிவ ரடிமுத லார்வம் பெருக்கல் உறுவ ரொழுக்க முவத்தன் முதலா இறிதியில் பல்குண நோக்கமென் றின்ன செறிதலி லார்வங்கள் செல்வந் தருமே. | (இ - ள்.) அறிவர் அடிமுதல் - அருகக்கடவுளின் திருவடிகளிலே, ஆர்வம் பெருக்கல் - மிக்க அன்புடைமை, உறுவர் ஒழுக்கம் உவத்தல் - துறவிகளையும் அவர்தம் ஒழுக்கங்களையும் அவாவுதல், முதலா - முதலியனவாக ஓதப்பட்ட, இறுதியில் பல்குணநோக்கம் - கேடில்லாத பலவாகிய உயரிய பண்புகளைக் குறிக்கொள்ளல், என்று இன்ன - என்ற இத்தன்மைகள், செறிதலில் ஆர்வங்கள் - ஆர்வஞ் செய்தற்குரியாரைக் கண்டவிடத்து அடங்காதே புறம்போந்து பூசல்தரும் இயல்புடைய ஆர்வங்களாம், செல்வந் தரும் - இவ்வார்வமுடைமை விழுச் செல்வத்தை நல்கும், (எ - று.) | |
| (பாடம்) 1 முனியல். 2 மணிமுட. 3 தெளிவின். | | |
|
|