பக்கம் : 1238
 

     அறிவர் - துறவோருமாம். செறிதலில் ஆர்வம் - அடைக்குந்தாழ் இல்லாத ஆர்வம்
என்றபடி.

     இறைவன் திருவடிக்கண் அன்புடைமை முதலிய இவ்வெல்லாம் ஆர்வங்கள்
எனப்படும்.

     “அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
     நண்பென்னும் நாடாச் சிறப்பு“  என்னும் குறளை நோக்குக.

(901)

 

புகழ்ச்சி நிகழ்வு

2012. ஆற்றல் வகையா லருந்தவ மேற்கொண்டு
நோற்று நுனித்த லொழுக்கந் தலைநிற்றல்
போற்றி யுரைத்தல் புகழ்ச்சி 1நிகழ்விஃ
தேற்று மிருவிசும் பீர்மலர்த் தாரோய்.
 
     (இ - ள்.) ஆற்றல் வகையால் - தவம் ஆற்றுதற்கென ஆகமத்திற் கூறப்பட்ட
வகையாலே, அருந்தவம் மேற்கொண்டு - செயற்கருந் தவவொழுக்கத்தை மேற்கொண்டு,
நோற்று - நோன்பாற்றி, நுனித்தல் - மெய்யுணர்தலும், ஒழுக்கந்தலைநிற்றல் -
நல்லொழுக்கத்தில் வழுவாது நிலைத்தலும், போற்றி உரைத்தல் - தோத்திரபாகுடத்துட்
கூறுமாற்றானே இறைவனைப் புகழ்ந்து பாடுதலும் ஆகிய இவைகள், புகழ்ச்சி நிகழ்வு இஃது
- இப்புகழ்ச்சி நிகழ்வுடைமை யானது, ஈர்மலர்த்தாரோய் - ஈரமுடைய மலர்மாலையணிந்த
மன்னனே, இருவிசும்பு ஏற்றும் - அமரருள் உய்க்கும்,
(எ - று.)

     தம் மாற்றற்கேற்ற வகையானே தவவொழுக்கை மேற்கொண்டு நோற்றலும்
மெய்யுணர்தலும் ஒழுக்கமுடைமையும் கடவுள் வழிபாடு செய்தலும் புகழ்ச்சி நிகழ்வாம் என்க.

(902)

தவம்
2013. அற்ற 2துவர்ப்பின ராகு மருநிலை
உற்றவர்க் கிவ்வா றொழுக்கந் தலைநிற்றல்
நற்றவ மென்றிங்கு நாங்கண் மொழிந்தது
மற்றிது வாணுல காள்விக்கு மன்னா.
 

     (பாடம்) 1 நிகழுவ. 2துவப்பின.