பக்கம் : 1239 | | (இ - ள்.) அற்ற துவர்ப்பினர் ஆகும் - ஆசியம் முதலிய அறுவகைத் துவர்ப்புகளும் அற்றவராகும், அருநிலை - நிற்றற்கரிய இவ்வுயர்ந்த நிலைக்கண், உற்றவர்க்கு - பொருந்தியவர்கட்கு, இவ்வாறு ஒழுக்கம் தலைநிற்றல் - இவ்வண்ணமாக நல்லொழுக்கத்தே சிறந்து நிற்றலே, நற்றவம் என்று - நல்ல தவம் என்று, நாங்கள் மொழிந்தது யாம் கூறியதாம், மன்னா மற்றிது வான் உலகு ஆள்விக்கும் - அரசனே! இத்தவமுடைமை தேவருலகத்தை ஆளும்படி செய்யும், (எ - று.) அறுவகைத் துவர்ப்பாவன :- ஆசியம் இரதி அரதி சோகம் பயம் சுகுத்சை என்பன. | (903) | | மெய்யறிவு | 2014. | நூற்பொருள் கேட்டு நுனித்தோ 1ருணர்வது மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே. | (இ - ள்.) நாற்படையோய் - நான்குவகைப் படைகளையும் உடைய வேந்தனே, ஞானநிகழ்வே - ஞானநிகழ்வு என்று சொல்லப்படுவது யாதெனில், நூற்பொருள் கேட்டு - மெய்ந்நூலாகிய பரமாகமத்தில் அருகனாற் கூறப்பட்ட மெய்ப்பொருளை நல்லாசிரியர்பால் கேட்டறிந்து, நுனித்தோர் - ஆராய்ந்த சான்றோரால், உணர்வது - தெளியப்படுவது, மால்படை கூட்டும் மயங்கு இருள் தீர்ப்பது - பெரிய இன்னல்களைக் கூட்டுகின்ற மயங்குதற்கு ஏதுவாகிய அறியாமை இருளை அகற்றுவது, மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது - மேம்பாடுடைய செம்பொருளைக் காட்டும் விளக்குப் போன்றது, (எ - று.) மெய்ப்பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது, மயக்கு அகற்றுவது ; மெய்ம்மை விளக்குவது ; ஞான நிகழ்வாம் என்க. | (904) | | தியானம் | 2015. | சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும் ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும் நன்றியின் 2மாற்றினை நல்குமிரண் டல்லன வென்றி விசும்பொடு வீடுந் தருமே. | (இ - ள்.) சென்று பெருகும் தியான நிகழ்ச்சியும் - பயிலும் தோறும் உயர்ந்து பெருகும் தன்மைத்தாய தியானநிகழ்ச்சி தானும், ஒன்ற உரைப்பின் பொருந்தக் கூறுங்கால், ஒருநால் வகைப்படும் - நான்கு பகுதித்தாம், இரண்டு | |
| (பாடம்) 1 ருணாவது. 2 மாற்றுத் தருமிரண் டல்லவை. | | |
|
|