(இ - ள்.) மஞ்சுதோய் வரையார் அஞ்சும் மாண்பினால் - முகில்கள் படியப்பெற்ற வெள்ளிமலையிடத்துள்ளவர்கள் அஞ்சும் வகையாக! விஞ்சைதாம் - வித்தைகள்; அஞ்சில் ஓதி நினைப்பின் அகத்தவாய் - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய சுயம்பிரபை எண்ணினால் அவளுடைய உள்ளத்திடத்தனவாகி; பணி செய்தல் - ஏவல்செய்தலை; விரும்பினன் - சுவலனசடி மன்னன் நாடினான்; எஞ்சிலா வகையால் - அவ்வித்தைகள் ஒன்றுங் குறைவில்லாமல்; இணர்கொண்ட - சுயம்பிரபையின் பால் ஒன்றாகப் பொருந்தின, (எ - று.) வெள்ளிமலையில் வாழும் வித்தியாதரர் எல்லோரும் அஞ்சும்படியாகத், தன்மகள் மாயவித்தைகள் எல்லாவற்றினும் வல்லவளாக வேண்டுமென்றும்; அவ்வித்தைகட்குரிய தெய்வங்களெல்லாம் அவள் ஏவலின்படி ஒழுக வேண்டுமென்றும், சுவலனசடியரசன் விரும்பினான், அவன் விரும்பியபடி எல்லா வித்தைகளும் சுயம்பிரபைக்குக் கைகூடின, ஆண் பெண் என்னும் வேறுபாடின்றி, இருபாலாரும் மாயவித்தைகளில் வல்லவர்களாக இருத்தல் வித்தியாதரர்கட்கியல்பு. |