பக்கம் : 1240 | | நன்றியில் மாற்றினை நல்கும் - அவற்றுள் இரண்டு நன்மையில்லாத பிறப்பிறப்பினையே தருவனவாம், அல்லன - எஞ்சிய இரண்டும், வென்றி விசும்பொடு - வெற்றியை உடைய சுவர்க்கத்தோடு, வீடும்தரும் - அழிவில்லாத வீட்டின்பத்தையும் கொடுக்கும், (எ - று.) மாற்று - பிறப்பிறப்பு ; மாறும் இயல்புடைமையின் மாற்றென்றார் ; தியானம் :- ஆர்த்தம் இரௌத்திரம் தருமம் சுக்கிலம் என நான்கு வகைப்படும். அவற்றுள் முன்னைய விரண்டும் பிறப்புக்குக் காரணமாம், பின்னைய இரண்டும் முறையே துறக்கத்தையும் வீட்டையு நல்கும் என்பதாம். ஆர்த்தத் தியானமாவது :- அன்புடையோர் இறக்கும்போதும் பகைவர் செழிப்புறும் போதும், இடுக்கண்கள் மிக்கபோதும் துறக்கவின்பத்தே அவாவுற்றபோதும் எழுகின்ற அவாவோடு கூடிய நினைவுத் தொடர். இதற்குப்பயன், விலங்குகளாகப் பிறத்தலாம். இரௌத்திரத் தியானமாவது :- கயமைத் தொழில்களிலே ஆனந்தமடையும் ஓரியல்புடையனாய் அவற்றைப் பற்றியே தொடர்ந்து நினைவுண்டாதல். இதற்குப் பயன், நிரயம் எய்துதலாம். இவ் விரண்டையும் துன்பத்தியானம் என்றும் கூறுப. இனி, தர்மத் தியானமும், சுக்கிலத் தியானமும் இன்பத் தியானம் என்ப. இவற்றுள், தர்மத்தியானம், கற்ப உலகங்களை எய்துவிக்கும் ; சுக்கிலத் தியானம் வீட்டின்பத்தைத் தரும் என்ப. இவற்றின் விரிவெல்லாம் விரிந்த நூல்களுட் காண்க. | (905) | | | 2016. | போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ் வாற்றி முயல்வார்க் 1ககநிகழ் வாமவை மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற் பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே. | (இ - ள்.) போற்றிய - சான்றோர்களாற் போற்றப்பட்டனவும், முன்புகழ்வு - முன்னர் எம்மாற் புகழ்ந்து கூறப்பட்டனவுமாகிய, புண்ணியப் பொற்சுண்ணம் - பத்துவகை அறமாகிய பொற்சுண்ணம் என்னும் மணப்பொடியை, ஆற்றி - அணிந்து கொண்டவராய், முயல்வார்க்கு தரும சுக்கிலத்தியானங்களிலே முயல்கின்றவர்க்கு, அகநிகழ்வாம் - அம்முயற்சி வீட்டினகத்தே தம்மைச் செலுத்தும் தவநிகழ்ச்சியாம், மாற்றி - அம்முயற்சிக்கு மாறுபட்டு, அவற்றை மறுதலையாக்கொளின் - அத்தியானத்தின் மறுதலையாகிய ஆர்த்த ரௌத்திரத்தியானங்களை மேற்கொண்டால், பாற்றி - பிறவிகளிலே விழும்படி செய்து, உழப்பிக்கும் - இன்னலுறுத்தும், பாக நிகழ்வே - பிரவிருத்தி நிகழ்ச்சியாகும், (எ - று.) (பாடம்) 1 ககமகிழ். அக நிகழ்வு நிவிருத்தி மார்க்கம் - பாக நிகழ்வு - பிரவிருத்தி மார்க்கம். தசவித தருமத்தைப் பொற்சுண்ணமாக உருவகித்தார் - இங்ஙனமே மேருமந்தரபுராணமுடையாரும். “அழுக்கிலா மாதவச் சாந்துமட்டியா“ என்புழி, பன்னிருவகைத் தவத்தையும் சாந்தமாக உருவகித்தமை காண்க. | (906) | | நற்காட்சி, நல்லொழுக்கமாகிய தியானங்கள் | 2017. | காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் 1கேற்றிய மாட்சி யுடையார் வதமில ராயினும் ஆட்சி கரிதன் றமருல கல்லது மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே. | (இ - ள்.) காட்சி எனும் பெயர் -நற்காட்சி என்று சொல்லப்படுகின்ற, கதிர் விளக்கு ஏற்றிய - ஒளியுடைய விளக்கைத் தம் உள்ளத்தே ஏற்றிக்கொண்ட, மாட்சியுடையார் - மாட்சியுடைய சான்றோர், வதம் இலராயினும் - விரதங்களை மேற்கொள்ளாவிடத்தும், அமருலகு ஆட்சிக்கு அரிதன்று - இவர்கள் வானுலகத்தை ஆளுதல் எளிதேயாம், அல்லது - அல்லாத சுக்லத்தியானம், மீட்சியில் - மீண்டு வருதலில்லாத, பேரின்ப வெள்ளத்து உழவு - பேரின்பமாகிய வீட்டின்பத்தை நுகர்விக்கும், (எ - று.) அமரர் - அமர், எனக் கடைகுறைந்து நின்றது. காட்சி - ஸம்யக் தரிசனம். | (907) | | தியானத்தின் சிறப்பு | 2018. | மெய்ப்பொரு டேறுதல் காட்சி 2விளக்கது 3செய்ப்படு மாயின் வினையென்னுந் தீயிருள் அப்படி மானு 4நிலையன் றதனைநின் கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய். | (இ - ள்.) மெய்ப்பொருள் தேறுதல் காட்சி விளக்கது - இறைவன் முதலிய பொருள்கள் எட்டையும் அளவைகளான் ஆராய்ந்து தெளிதலே காட்சி என்னும் விளக்காம், அது செய்ப்படுமாயின் - அவ்வாராய்ந்து தெளிதல் என்னும் நற்காட்சி மேற்கொள்ளப்பட்டால், வினையென்னும் | |
| (பாடம்) 1 கேற்றியும். 2 விளக்கத்து. 3 செப்படு 4 நிலையன்றிதனை, நிலையன்றிதனை. | | |
|
|