பக்கம் : 1242
 

      (இ - ள்.) ஆழி இழந்த அயகண்டன் ஆதியா - தன் சக்கரப் படையை
இழந்தொழிந்தவனாகிய அச்சுவகண்டன் முதலிய, பாழிவல - மிக்க ஆற்றலுடைய,
வன்பகைவர் மும் மூவரும் - வலிய பகைவர்களாகிய பிரதிவாசுதேவர் ஒன்பதின்மரும், வீழ
உரைத்தேன் - விரும்புமாற்றானே கூறாநின்றேன், ஊழிதொறு ஊழி - ஒவ்வோரூழியினும்,
ஞாலத்துள் உலப்பில கண்டாய் - இவ்வுலகத்தே இத்திப்பிய மனிதராய்ப் பிறக்கும் உயிர்கள்
முடிவற்றனவாம், (எ - று.)

     அச்சுவகண்டன், மேரகன், தாரகன், நிசும்பன், மதுகைடன், புயவலி, பிரகரணன்,
இராவணன், சராசந்தன் என்னும் இவ் வொன்பதின்மரும் பிரதி வாசுதேவர் என்ப.இவ்
வாசுதேவ பிரதி வாசுதேவர்கள் ஊழிதோறும்
தோன்றுவர் என்றபடி.

 (910)

 
 
2021. தேய வினைவவெல்லுந் தெய்வ மனிசருள்
நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட்
பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத்
தாய திகிரி யவரு மவரே.
 
     (இ - ள்.) தேயவினை வெல்லும் - தேய்ந்திறும்படி இரு வினைகளையும் வெல்லும்
இயல்புடைய, தெய்வமனிசருள் - திப்பியருள்ளே, நீயும் ஒருவனை - பயாபதிமன்னனே
நீயும் ஒருவனாவாய், நின் குலத்து - உன்னுடைய மரபின், ஆதிக்கண் - தொடக்க காலத்தே
தோன்றிய, பாய விழுச்சீர்ப் பரதனை - பரவிய சிறந்த புகழையுடைய பரதனை, உள்ளுறுத்து
- உள்ளிட்ட, ஆய திகிரியவரும் அவரே - தோன்றிய சக்கரவர்த்திகளும் திப்பியர்களே
ஆவர், (எ - று.)

     “பரதன், சகரன், மகவான், சனத்குமாரன், சாந்திநாதன். குந்துநாதன், அரநாதன்,
சுபௌமன், பதுமன், அரிசேனன் செயசேனன், பிரமதத்தன் என்னும் இப்பன்னிரு
சக்கரவர்த்திகளும் தெய்வ மனிதர் என்க.

(911)

 
தீர்த்தங்கரர்
2022. தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும்
பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர்
தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார்.
 
     (இ - ள்.) தீர்த்தம் சிறக்கும் திருமறு மார்பரும் - பரமாகம வுணர்ச்சியானே
சிறப்புடைய திருமகளாகிய மறுவை அணிந்த மார்பையுடையவரும், ஓர்த்து பேர்த்துப்
பிறவாப் பெருமை பெறுநரும் -