பக்கம் : 1243 | | ஆராய்ந்து மீண்டும் இவ்வுலகத்தே பிறவாமைக்கு ஏதுவாகிய துறவறத்தே தலைநின்ற சிறப்பை எய்தியவரும், இவ்வுலகினுள் உத்தமர் - இம்மண்ணுலகத்திலேயே வாழும் தீர்த்தங்கரர் ஆவர், தார் தங்குமார்ப - மாலைமார்பனே, மற்றவர் - அவ்வுத்தமர்கள், தவத்தின் வருவர் - முற்பிறவிகளிலே ஆற்றிய தவப்பயனால், இவ்வுயரிய பிறப்பிலே தோன்றுவார், (எ - று.) தீர்த்தம் - பரமாகமம் தீர்த்தம் சிறப்போரும், பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுவோரும் தீர்த்தங்கரர் ஆவர். இவர்கள் தவப்பயனாலே பிறந்தோர் என்க. | (912) | | வேறு | 2023. | தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும் மக்களிவ ராவர்மத யானைமற வேலோய் புக்கவரு ளேபடுவர் போகநிலஞ் சார்ந்தார் ஒக்கவவர் தன்மையு முரைக்கவுல வாவே. | (இ - ள்.) தக்க மிகுதானம் முதலாய தலைநிற்கும் - தகுதியுடைய மிக்க தானம் முதலியவற்றுள் சிறப்புடையோராய் ஒழுகும், மக்கள் இவராவர் - மனிதர்கள் இவர்கள் ஆவார், மதயானை மறவேலோய் - மதமிக்க யானைகளையும் ஆற்றல் மிக்க வேலையும் உடைய வேந்தே, புக்கு அவருளே படுவர் - புகுந்து அப்போக மனிதருள் பிறப்பர், போகநிலம் சார்ந்தார் - அப்போக பூமிகளிலே வதிவாராகிய, அவர் தன்மையும் ஒக்க உரைக்க - அவர்கள் பெருமையும் பொருந்தக் கூறுவோமெனில், உலவாவே - கடைபோகமாட்டா, (எ - று.) தானம் முதலிய புண்ணிய வாயில்களை மேற்கொண்டு ஒழுகுபவரே போக நிலங்களிலே சென்று பிறப்போர் என்க. | (913) | | 2024. | உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோரம் முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய் பத்துவகை 1மாதவ மியற்றிய பயத்தால் அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய். | (இ - ள்.) மூரி நெடுவேலோய் - வலிய நீண்ட வேற்படையையுடைய மன்னனே !, உத்தமர்கள் ஏனை இடையோர்கள் கடையோராம் - தலையாயவரும் ஒழிந்த இடையாயவரும் கடையாயவரும் என்னும், முத்தகையர் ஆவர் அவர் - மூன்று வகையினர் ஆவர் அப்போகமனிதர், பத்துவகை மாதவம் இயற்றிய பயத்தால் - தலைப்பொறை முதலிய பத்துவகை அறவொழுக்கமுடைய சிறந்த தவத்தைப்புரிந்த பயனாலும், அத்தகைய செய்கை - அவ்வாறாய செயல்களானும் வேற்றுமை யுண்மையின், அனைய அவர்க்கு கண்டாய் - அத்தகைய மூவகைப் பாகுபாடுகள் உளவாயின அவர் தம்முள், (எ - று.) | |
| (பாடம்) 1 பாதவம். | | |
|
|