பக்கம் : 1244
 

     போக மனிதர் தலை யிடைகடை என மூவகைப்படுவர். அப்பகுப்பு அவர் தவப்
பெருமை சிறுமைபற்றி வந்தது என்க.

(914)

போக நிலத்தின் இயல்புணர்த்துவான்
ஒரு வரலாறு கூறுதல்
2025. அங்கிருவர் 1தம்பதிகள் செய்கையை யறைந்தால்
இங்கிருவர் 2செய்கைதமை யெண்ணியறி வாய்நீ
தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய்
இங்கிருவர் தேவர்கள் வளர்ப்ப 3வியல் கின்றார்.
 
     (இ - ள்.) அங்கு இருவர் தம்பதிகள் - அவ்விடத்தே நுகர்ச்சியை உடைய இரண்டு
காதலர்களின், செய்கையை அறைந்தால் - செயல்களை எடுத்துக் கூறினால், நீ இங்கு
இருவர் செய்கை தமை யெண்ணி அறிவாய் - இவ்விடத்தே வாழும் இரு காதலர்களின்
வாழ்க்கையோடு வைத்து ஆராய்ந்து அவற்றின் பெருமை சிறுமைகளை நீயே
உணர்ந்துகொள்க, இங்கு - இப்போக பூமியில், இருவர் - ஓர் ஆடவனும் ஒருமகளும்,
தம்குரவர் இருவர் மாறு இருவர் தாமாய் - தம் இருமுது குரவருள் வைத்து, ஆடவன்
குரவர் இருவர், மாறாய மகளின் குரவர் இருவரும் ஆகி தேவர்கள் வளர்ப்ப வளர்கின்றார்
- அமரர்கள் அன்புடன் வளர்க்க வளரா நின்றார், (எ - று.)

     போக மனிதன் வாழ்க்கைச் சிறப்பை ஒரு தலைவன் தலைவியர்பால் வைத்துக் கூறின்
நீ நன்குணர்வை எனக் கூறித் தொடங்குகின்றவர் அப்போக பூமியிலே ஓர் ஆடவனும்
பெண்ணும் தோன்றா நின்றனர் என்றார் என்க.

(915)

 
2026. நக்ககுழ விப்பருவ நாற்பதினொ டொன்பான்
ஒக்கவரு 4நாள்கள்கலை யோடுட னிறைந்தால்
மிக்கவொளி சூழ்ந்துமிளிர் மேனியவ ராகித்
தக்கவிள மைப்பருவ மெய்தினர்க டாமே.
 
     (இ - ள்.) நக்க குழவிப் பருவம் - இப்போக பூமியிற் பிறந்த இக்காதலர்கள்
விளக்கமுடைய குழவிப் பருவம், நாற்பதினோடு ஒன்பான் ஒக்கவரும் நாள்கள் -
நாற்பத்தொன்பது என்ற எண் பொருந்தவந்த நாள் அகவையில், கலையோடு உடனிறைந்து
- கல்வியோடு கூடி வளர்ச்சி
 

     (பாடம்) 1 செய்கையறியும்படி மொழிந்தால். 2 செய்கைகளும் எண்ணி.

     3 வளர்கின்றார். 4 நாள்கடலை.