பக்கம் : 1246
 

     மாணிக்கமலையின் பெரிய குவடுகளிலே குங்குமச் சாந்து அப்பப் பட்டாற்போன்ற,
மணி மேனியொடு - அழகிய திருமேனியுடனே, ஞாலம் அளிகொண்ட - உலகம்
முழுதையும் ஓம்புதலை மேற்கொண்ட, நளிர் - குளிர்ந்த, தாமரை முகத்தான் - தாமரை
மலர்போலும் முகத்தை உடைய அம்மகனும், காளை பொலிவுற்றான் - இளமையாற்
றிகழ்ந்தான், (எ - று.)

     காளை - காளைப்பருவம்

     ஞாலம் அளிகொண்டமுகம், நளிர் தாமரை முகம் என இயைத்துக் கொள்க.
குஞ்சிகள் நிறைந்து தாமரை முகத்தோடே மணிமேனியோடு காளைப் பருவமெய்திப்
பொலிவுற்றான் என்க.

(918)

 
2029. தாதுபடு சண்பக மிகந்தநறு மேனிக்
காதுபுனை காமர்குழை பொற்சுருளை மின்ன
மீதுபடு கற்பக விளந்தளிர் மிலைச்சிப்
போதுபுனை கோதையவள் பூம்பொழி லணைந்தாள்.
 
     (இ - ள்.) தாதுபடு சண்பகம் இகந்த - பூந்துகள் பொருந்திய சண்பக மலரின்
மணத்தையும் கடந்த, நறுமேனி - நறுமணங்கமழும் திருமேனியை உடையவளாய், காது
புனைகாமர்குழை - செவியின்கண் பெய்யப்பட்ட அழகிய தோடுகளாகிய, பொற்சுருளை -
பொன்னால் இயன்ற சுருள்கள், மின்ன - ஒளிருமாறு, கற்பகம் மீதுபடு இளந்தளிர் மிலைச்சி
- கற்பகமரத்தின் மிசை தளிர்ப்பதாகிய இளைய தளிரைச் சூடிக்கொண்டு, போதுபுனை
கோதையவள் - மலராற் புனையப்பட்ட மாலையையுடைய அக்கன்னி, பூம்பொழில்
அணைந்தாள் - ஒரு பூஞ்சோலையிலே புகுந்தாள், (எ - று.)

     நறுமேனியளாய், பொற்சுருளை மின்ன தளிர் மிலைச்சி, கோதையவள் ஒரு பொழிலிடத்தே உற்றாள் என்க.

(919)

 
2030. பவழவரை யன்னதிர 1டோட்பரவை 2மார்பன்
தவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக்
கவழமனை மேவுகளி யானையென வந்தாங்
கவிழுமல ரீர்ம்பொழிலு 3ளையனு 4மணைந்தான்.
 

     (பாடம்) 1 டோளவரை. 2 மார்வன். 3 ளிளையனு. 4 மடைந்தான்.