(இ - ள்.) ஐயனும் - அத்தலைமகனும்,. பவழவரை அன்னதிரள்தோள் - பவழமலை போன்று திரண்ட தோள்களை உடையவனாய், பரவை மார்பன் - அகன்ற மார்பையுடைனாய், தவழும் மணி ஆரமொடு - மார்பிலே தவழுகின்ற மணிவடத்தோடு, தார் மணி தயங்க - மாலையின் அழகு திகது, கவழமனை மேவு களி யானை என - தான் கவளங்கொள்ளும் கூடத்திற்குச் செல்லும் ஒரு களிறு போன்று வந்து, வந்து அவிழும் மலர் ஈர்ம் பொழிலுள் - மலர்ந்த மலர் செறிந்த குளிர்ந்த அப்பொழிலுள், ஆங்கு அணைந்தான் - அக்கன்னி நின்ற சூழலை எய்தினான், (எ - று.) பரவை மார்பனும் தயங்க யானை என அப்பொழிலை எய்தினான் என்க. |
(இ - ள்.) கன்னி இவள்மேல் - இக்கன்னியின்மேல், இளைய காளை இருகண்ணும் - இளமையுடைய இத்தலைமகனுடைய இரண்டு கண்களும், கமழ்மன்னு தாமரையின் வாய் இதழ் பின்னி அலங்கல் என வீழ்ந்த - மணம் தங்கிய தாமரையின்கண் உள்ள இதழ்களாலே புனையப்பட்ட மாலைபோல் வீழ்ந்தன, பிணை அன்ன அவள் கண்ணும் - மான்பிணை போல்பவளாகிய அத் தலைவியினுடைய கண்களும், துன்னும் இரு நீலம் என - செறிந்த இரண்டு நீலோற்பல மலர்களாலே இயன்ற பிணையலைப் போன்று, வந்து எதிர் துதைந்த - அவளது நிறைகடந்து வந்து அத்தலைவன் தோள்மேல் பொருந்தின, (எ - று.) இளைய காளை யிருகண்ணும் கன்னிமேல் வீழ்ந்த பிணையன்னவள் கண்ணும் காளைமேல் வீழ்ந்த என்க. |