பக்கம் : 1250 | | (இ - ள்.) பல்லம் முதலோர் பகுதி மூன்று - இப்போக பூமியினும் வைத்துத் தலை இடை கடையென்னும் முப்பகுதிகளிலே முதற்பகுதியோர் வாழ்நாள் அளவு மூன்று பல்லம் ஆம், அல்ல இருவர்க்கு - எஞ்சிய இடையும் கடையும் ஆயினார்க்கு, இரண்டும் ஒன்றும் - வாழ்நாள் எல்லை நிரலே இரண்டு பல்லமும் ஒருபல்லமும் ஆம், அம்முறையின் அமிர்தும் ஏறும் - இம்முறையானே உண்டியும் ஏறுவனவாம், நல்ல நிலம் காலம் உயர்வு என்று இவைகள் நாடி - நன்மையுடைய நிலத்தானும் காலத்தானும் சிறப்பானும் ஆராய்ந்து, இவர்கள் செய்கை - இம்முத்திறத்த போகமாந்தரின் செயல்களை, சொல்ல உலவா - கூறுவோமெனில் அவை கடைபோகா, சுடர் வேலோய் - ஒளிவேலுடைய வேந்தனே!, (எ - று.) தலையிடை கடையாய போக பூமியினர்க்கு, வாழ்நாள் போன்றே உணவும் முறையே மூன்று நாளிடையிட்டும் இரண்டுநாள் இடையிட்டும் ஒருநாள் இடையிட்டும் உண்ணப்படும், மேலும் அவ்வுண்டியின் அளவும் நிரலே கடலை, நெல்லிக்கனி, விளங்கனிகளின் அளவிற்றாய் உயரும் என்ப. | (926) | | 2037. | செம்பவழம் வெண்பளிங்கு 1பைந்தளிர் சிறக்கும் வம்பழகு கொண்டமணி மேனியவர் பூவார் கொம்பவிழுஞ் சண்பகங்கண் முல்லையிணர்க் கோங்கம் அம்பவழ வண்ணமுத 2லானவர்மெய் நாற்றம். | (இ - ள்.) செம்பவழம் வெண் பளிங்கு பைந்தளிர் - சிவந்த பவழத்தையும், வெண்மையான பளிங்கையும் பச்சையான தளிரையும் போன்று, வம்பழகு கொண்ட - புதிய அழகினைக் கொண்ட, அவர் - அத்தலையிடை கடையாய போக பூமியினரின், மணிமேனி - மணியை ஒத்த உடல்கள், சிறக்கும் - முறையே திகழ்வனவாம், அம்பவழ வண்ணம் முதலானவர் - அழகிய பவழ வண்ணம் முதலிய மூன்று வண்ணங் களையுமுடைய தலையாய போக பூமியார் முதலிய மூவருடைய, மெய்நாற்றம் - உடலின் நறுமணமும், பூ ஆர் கொம்பு அவிழும் - மலர்கள் செறிந்த கிளைகளிலே மலர்ந்துள்ள, சண்பகங்கள் முல்லையிணர் கோங்கம் - நிரலே சண்பக மலர்களையும் முல்லை மலர்க் கொத்தையும், கோங்க மலரையும் ஒக்கும், (எ - று.) போக பூமியில் வாழ்வோருடைய மேனிவண்ணம் பவழம் முதலியவற்றை ஒக்கும், அவர் மேனி நாற்றம் சண்பகமலர் முதலியவற்றை ஒக்கும், என்க. | (927) | |
| (பாடம்) 1 பைந்தளிரவற்றின், ரிவற்றின், 2 லாலவர்மெய். | | |
|
|