பக்கம் : 1251 | | | 2038. | நலங்கண்மிகு நம்முலகி னன்மைமிகு நீரால் புலங்கண்மிகு போகமொடு போகநிலத் துள்ளால் விலங்கொடுள 1வாழ்பறவை யவ்வுடம்பு விட்டால் கலங்கண்மிகு கற்பநில 2மேறுவன கண்டாய். | (இ - ள்.) நலங்கள் மிகு நம் உலகில் - அறமுதலிய நன்மை மிகுதற்கு இடமான நம் மண்ணுலகில், நன்மை மிகு நீரால் - பிறவுயிர்க்கு நன்மையே மிகும்படி வாழ்ந்தவொரு தன்மை யுண்மையால், புலங்கள் மிகு போகமொடு - சுவை முதலிய புலன்களாலே பெருகும் நுகர்ச்சியுன்பத்தோடே, போக நிலத்து உள்ளால் உள - அப்போக பூமியினூடே தோன்றி வாழாநின்ற, விலங்குவாழ் பறவை - விலங்கினங்களும் வாழ்தலையுடைய பறவை யினங்களும், அவ்வுடம்பு விட்டால் - அந்நிலத்தே அவ்வவ் வுடல்களை விட்ட பின்னர், கலங்கள் மிகு கற்பநிலம் ஏறுவன கண்டாய் - அணிகலன்கள் மிக்க கற்பலோகங்களிலே சென்று பிறப்பனவாம், கண்டாய் : முன்னிலையசை, (எ - று.) அப்போக நிலங்களில் உள்ள பறவை முதலியனவும் அவ்வுலகத்தை விட்டால் அவற்றினும் உயர்ந்த நிலங்களிலே சென்று பிறக்கும் என்க. | (928) | | தேவர்கதித் துன்பம் | வேறு | 2039. | 3பூவிரியு நறுமேனிப் பொன்னிலங்கு நிமிர்சோதித் தேவர்கடந் திறமுரைத்த றேவருக்கு மரிதெனினும் நாவிரவி நாமுரைப்ப நால்வகையாய் 2 விரியுமவை ஓவரிய பெரும்புகழா யொருவகையா லுரைப்பக்கேள். | (இ - ள்.) பூவிரியும் நறுமேனி - அழகு பரவுகின்ற நல்ல உடலையும், பொன் இலங்கு நிமிர் சோதி - பொன்னிறமாகத் திகழ்ந்து பரவும் ஒளியையுமுடைய, தேவர்கள் தம் திறம் உரைத்தல் - தேவர்களின் இயல்பைக் கூறுதல், தேவருக்கும் அரிது எனினும் - அத்தேவர்களுக்கும் அருமையே ஆகும் என்றாலும், நாவிரவி நாம் உரைப்ப - நாவொடு பொருந்த யாம் கூறுமிடத்து, ஒரு வகையால் உரைப்ப - இயன்றதோர் ஆற்றானே கூறு, ஓவு அரிய பெரும்புகழாய் கேள் - ஒழிவற்ற பெரிய புகழுடையோயே ! கேட்கக் கடவாய், அவை நால்வகையாய் விரியும் - அத் தேவர் பிறப்புக்கள் நான்கு வகைப்படுவனவாம், (எ - று.) தேவர்கள் நான்கு வகைப்படுவர் என்பதாம், அவ்வகைகளை மேலே கூறுப. | (929) | |
| (பாடம்) 1 வாழ்பவை. 2 மேறுவர்கள். 3 பூவிரி். 4 விரிவகையும். | | |
|
|