பக்கம் : 1255 | | | மந்தரத்தை வலஞ்சூழ்ந்து 1வருபவரு நிற்பவரும் 2சுந்தரஞ்சேர் மணிமுடியார் சுடர்பவருஞ் சோதிடரே. | (இ - ள்.) சந்திரரும் - திங்களும், சூரியரும் - ஞாயிறும், தாரகையும் - உடுக்கூட்டங்களும், நாண் மீனும் - அசுவினி முதலிய விண்மீன்களும், வெந்திறல கோள்களும் - வெவ்விய ஆற்றலுடைய கோள்களும், ஆம் என விளங்கி - ஆகும் என்று அறிஞராற் கூறப்பட்டு விளக்கமுடையவராய், விசும்பு ஆறா - வான் வழியாக, மந்தரத்தை வலம் சூழ்ந்து - இமய மலையை வலம் படச் சுற்றி, வருபவரும் - இயங்குவோரும், நிற்பவரும் - நிலைத்து நிற்பவரும், சுந்தரம் சேர் மணிமுடியாய் - அழகுடைய மணிபதித்த முடியணிந்த வேந்தே, சுடர்பவரும் - ஒளிபரப்புபவரும், சோதிடரே - சோதிடர் என்பவராவர் ; (எ - று.) சந்திரர் சூரியர் நாண்மீன் கோள்கள் என்று விளக்கி மேருவினை வலம் வருபவரும் நிற்பவரும் சோதிட தேவர் என்க. | (935) | | இத்தேவர் கதியிற்படுவோர் இவரெனல் | 2046. | எண்ணியமுத் 3தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க் 4கண்ணியறு நற்காட்சிக் கதிர்விளக்குத் 5தூண்டினார் 6நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று 7புண்ணியங்கள் படைத்தாரக் 8குழுவினிடைப் பொலிவாரே. | (இ - ள்.) எண்ணிய முத்தேவர்களும் - ஈண்டு எண்ணிக்கூறப்பட்ட பவணர் வியந்தரர் சோதிடர் என்னும் மூன்றுவகைத் தேவர்களும், இவர் மடந்தையவரும் ஆய் - இவர்கட்குத் தலைவியராய மகளிரும் ஆகி, கண் இயல் தூ - கருதத்தக்க இயல்பமைந்த தூய்மையான, நற்காட்சிக் கதிர் விளக்குத் தூண்டினார் - நற்காட்சி என்னும் சுடர்விளக்கைத் தம்முள் ஏற்றி மேலும் தூண்டினவர்கள் தாம், நண்ணுபவோ எனின் - இவ்வானுலகத்தே எய்துவரோ என்று நீ வினவுவாயாயின், நண்ணார் - அத்துணையானே, இப்பிறவியை எய்தமாட்டார், நல்விரதம் தலைநின்று - அக்காட்சியோடே நல்ல விரத வொழுக்கத்திலும் சிறந்து, புண்ணியங்கள் படைத்தார் - அறஞ் செய்தோர்களே, அக்குழுவினிடைப் பொலிவார் - அம் முவ்வகைத் தேவர் கூட்டத்தே பிறந்து விளங்குவார்கள், (எ - று.) நல்ல விரதங்களை மேற்கொண்டு புண்ணியங்கள் செய்தோரே அத் தேவராவர் என்க. | (936) | |
| (பாடம்) 1 வருமவரு. 2 சுந்தரமணி. 3தேவரு. 4கண்ணியநற். 5தூண்டனார். 6நண்ணிபவெனி. 7புண்ணியம் படைத்தார்கள். 8குழுவினுளாவரே. | | |
|
|