பக்கம் : 1257 | | மந்தர மலையின் முடியிலே உள்ள அந்தரவுலகத்தே வாழும் தேவர்கள் இந்திவில்லைப்போற் றோன்றி மணியுருப் படைத்துத் தோன்றுவர் என்க. | (938) | | 2049. | அலர்மாரி மேற்சொரிவா ரமிர்தநீ ராட்டுவார் 1பலமாண்ட கலனணிந்து பலாண்டிசைப்பார் பாடுவார் மலர்மாண்ட மணிக்கவரி மருங்கசைப்பார் மடந்தையரைச் சிலர்மாணச் சேர்த்துவார் தேவரா யதுபொழுதே. | (இ - ள்.) தேவர் ஆயது பொழுதே - இவ்வுலகத்தே புண்ணியம் புரிந்து தேவராகிய அப்பொழுதே, அலர் மாரிமேற் சொரிவார் - முன்னர்த் தேவராயோர் மலர்மாரியை இப்புதிய தேவர் மேலே பொழிவார், அமிர்த நீராட்டுவார் - அமிர்தமாகிய கடவுள் நீரிலே ஆடச்செய்வர், பலமாண்ட கலன் அணிந்து - பலவாகிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிவித்து, பலாண்டு இசைப்பார் - பல்லாண்டு கூறி வாழ்த்துவர், பாடுவார் - இசை பாடுவார், மலர் மாண்ட மணிக்கவரி மருங்கு அசைப்பார் - மலராலே மாட்சிமைப்பட்ட மணிக்காம்புடைய சாமரைகளைப் பக்கத்தே நின்று இரட்டுவர், சிலர் மாண மடந்தையரைச் சேர்த்துவார் - வேறுசிலர், இன்பத்தாலே மாட்சிமைப்படுமாறு தேவமகளிரொடு திருமணம் புணர்த்துவர், (எ - று.) புதிதாக ஒருவர் தேவராகும் பொழுது பழைய தேவர்கள் மலர் மழை பொழிந்து அமிர்த நீராட்டிக் கலனணிந்து பாடிக் கவரி யசைத்து மணம் புணர்த்துப் பாராட்டுவர் என்க. | (939) | | 2050. | ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர் ஏடார்ந்த 2தொங்கலரா யின்பநீர்ப் பெருவெள்ளம் நீடாரக் குளித்தாடு நிலைமையரே யவரெல்லாம். | (இ - ள்.) ஆடாதும் - நீராடுதல் இல்லாத பொழுதும், ஒளி திகழும் - ஒளி பரப்பாநின்ற, ஆர் அணங்கு - பொருந்திய அழகையுடைய, திருமேனியராய் - நல்லுடலையும், வாடாத கண்ணியினர் - ஒரு பொழுதும் வாடுதலில்லாத முடிமாலையையுமுடையராய், மழுங்காத பூந்துகிலர் - புதுமை மழுங்காத அழகிய ஆடையுடையராய், ஏடார்ந்த தொங்கலாய் - இதழ் பொருந்திய கற்பக மலர் மாலையை அணிந்தவராய், இன்பநீர்ப் பெருவெள்ளம் - இன்பம் என்னும் நீராற்பெருகிய பெரிய வெள்ளத்தே, ஆர நீடு குளித்து - உடலார நெடிது குளித்து, ஆடும் - விளையாட்டாருகின்ற, நிலைமையரே அவர் எல்லாம் - சிறந்த நிலையை உடையவர் ஆவர் அத்தேவர் பிறப்புற்றோரெல்லாம், (எ - று.) | |
| (பாடம்) 1 பலர் மாண்ட. 2தொங்கலா. | | |
|
|