பக்கம் : 1258
 

     அழகுடைய திருமேனியும் வாடாத மாலையும் மழுங்காத ஆடையும் உடையராய்
எப்போதும் இன்பமே நுகர்வது தேவரியல்பு என்க.

 (940)

 
2051. பொன்மாட நெடுநிலத்தார் புகலமளி யணைமேலார்
1கன்மாடு பொன்வளருங் கதிர்மணிக்குன் றதன்மேலார்
மின்மாடு மிளிர்ந்திலங்கு விமானத்தா ரெனி னல்லால்
சொன்மாடு பிறிதில்லைச் சுவர்க்கஞ்சேர்ந் தவர்கட்கே.
 
     (இ - ள்.) பொன்மாட நெடுநிலத்தார் - பொன்னாலியன்ற மாடங்களாகிய நீளிய
நிலத்தின்கண் வதிவோர், புகல் அமளி அணை மேலார் - விரும்புதற்குரிய பூவணைகளில்
வதிவோர், கல்மாடு பொன்வளரும் - மணிகளின் பக்கத்தே பொன்கள் பெருகிக் கிடக்கும்
கதிர் மணிக்குன்றதன் மேலார் - ஒளியுடைய மாணிக்க மலையின் உச்சியில் வதிவோர், மின்
மாடு மிளிர்ந்து இலங்கும் விமானத்தார் - ஒளி பக்கத்தே சுடர்ந்து திகழும் விமானத்தின்
கண் வதிவோர், எனின் அல்லால் - என்று கூறுவதல்லது, மாடு சொல் பிறிதில்லை -
இவையிற்றிற்கு அயலாகக் கூறுதற்குரிய சொல் வேறு இல்லையாம், சுவர்க்கம்
சேர்ந்தவர்கட்கு - வானுலகத் தேவர்களுக்கு, (எ -று.)

     சுவர்க்கம் சேர்ந்தவர் பொன்மாடமிசையும் அமளியிடத்தும் மணிக்குன்றின் மேலும்
விமானத்திலும் உறைந்து மகிழ்வார் என்க.

(941)

 
2052. 2கந்தருவக் கோட்டியுள்ளார் கண்கனிய நாடகங்கண்
டிந்திரனோ டினிதிருந் 3திளம்பிடியார் பாராட்டச்
சுந்தரமா மணிமாடச் சூளிகைய ரெனினல்லால்
4அந்தரமேற் பிறிதில்லை யமரருல கடைந்தவர்க்கே.
 
     (இ - ள்.) கந்தருவக் கோட்டியுள்ளார் - கந்தருவர் கூட்டத்தில் உள்ள தேவர்கள்,
கண் கனிய - கட்புலன் இன்பத்தின் முதிராநிற்பர், நாடகங்கண்டு - கூத்தாட்டின்பத்தை
நுகர்ந்து, இந்திரனோடினிது இருந்து - தம்மரசனாகிய இந்திரனுடைய திருவோலக்கத்தே
இனிதாக அமர்ந்திருந்து, இளம்பிடியார் பாராட்ட - இளைய பெண்யானைபோன்ற
மகளிர்கள் புகழ்ந்தேத்த, சுந்தர மா மணி மாடச் சூளிகையர் - அழகிய சிறப்புடைய
மணிகள் அழுத்தப்பட்ட மாடங்களின் உச்சியில் வதிவார், எனின் அல்லால் - என்று
கூறுதலன்றி, அமரர் உலகு அடைந்தவர்க்கு - தேவருலகிற் பிறந்தார்க்கு, மேல் பிறிது
அந்தரமில்லை - இவற்றின் மேலாய்க் கூறுதற்குப் பிறிதொரு உவமை யின்றாம், (எ - று.)
 

     (பாடம்) 1 கன்வாடு. 2கந்தர்வக். 3திளப்படியர். 4அந் நேரம்.